<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-6925413834765719932</id><updated>2011-10-04T22:05:17.514-07:00</updated><title type='text'>வேங்கையன் பூங்கொடி (பாகம் -1)</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://venkaiyan.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6925413834765719932/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://venkaiyan.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>வேங்கையன் பூங்கொடி (காவியம்)</name><uri>http://www.blogger.com/profile/03445322919374394926</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://1.bp.blogspot.com/-yJU2OVtkJVc/TeJSVjeGpMI/AAAAAAAAABw/BetBpneXF6I/s220/54526902.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>23</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-6925413834765719932.post-6227149120018214990</id><published>2009-10-25T07:22:00.000-07:00</published><updated>2009-10-26T06:46:55.466-07:00</updated><title type='text'>அங்கம் 1</title><content type='html'>&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;அவல்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சூரியனுக்கு அழைப்பு விடுத்து&lt;br /&gt;சேவல்கள் கூவும்.&lt;br /&gt;காலை மலர்ந்தது என்று&lt;br /&gt;காகங்கள் கரையும்.&lt;br /&gt;&lt;br /&gt;மண்டலியை விழிக்கச் சொல்லி&lt;br /&gt;மயில்கள் அகவும்.&lt;br /&gt;இத்தனையும் கேட்டபடி&lt;br /&gt;மந்தமாருதம் உலவும்.&lt;br /&gt;&lt;br /&gt;மெல்லிய புகையாய் பனியின் மூட்டம்.&lt;br /&gt;புல்லினின் மீதே அதன் தனி நாட்டம்.&lt;br /&gt;மெல்ல வளைந்தே நிலத்தினை நோக்கும் - புல்&lt;br /&gt;நுனியினில் தொக்கிடும் பனிநீர்த் தேக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;பொன்னலரி மொட்டுகள்&lt;br /&gt;மென்மையாக முடிச்சவிழ்க்கும்.&lt;br /&gt;போதை கொள்ளும் வண்டு வரச்&lt;br /&gt;செவ்விரத்தம் பூச்சிரிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;கண் குளிர வெண்மை தரும்&lt;br /&gt;கல்யாணி நிதம் பூக்க - தன்&lt;br /&gt;கணுக்குகள் எங்கெங்கும்&lt;br /&gt;கலகலப்பாய் முகை கட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ரோசா மொட்டுகள் இதழ் விரிக்க,&lt;br /&gt;கண்டு ரோசங் கொண்ட&lt;br /&gt;நந்தியாவட்டைகளின் நகை வெடிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;கஞ்ச மொட்டுகள் கட்டவிழ்க்கப் பார்த்து&lt;br /&gt;தாழை முகைகள் தமைத் திறக்கும்.&lt;br /&gt;கமுகுகள் உதிர்த்த ஆடையின் இடத்தில்&lt;br /&gt;புதிதாய் பிறந்த பாளைகள் மிளிரும்.&lt;br /&gt;&lt;br /&gt;பாரம் தாக்கிய கூந்தலில் விரிந்த&lt;br /&gt;தென்னம் பூக்களை அணில்கள் மேயும்.&lt;br /&gt;மாவில், பலாவில் குயில்கள் கூடி&lt;br /&gt;கூவிக் கூவித் தம் துணை அழைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_P58idDD7rtw/SuWnKyWv39I/AAAAAAAAAAs/FsfU8hPnvKM/s1600-h/birdflowerir1.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 200px; height: 133px;" src="http://2.bp.blogspot.com/_P58idDD7rtw/SuWnKyWv39I/AAAAAAAAAAs/FsfU8hPnvKM/s200/birdflowerir1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5396903532231122898" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பூத்த மரத்தில் சிட்டுக் குருவிகள்&lt;br /&gt;தாவித் தாவித் தேனினை உறிஞ்சும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பட்ட மரத்துப் பொந்தில் இருந்து - எழில்&lt;br /&gt;பச்சைக் கிளிகள் கொஞ்சிக் குலவும்.&lt;br /&gt;எட்ட இடத்தில் ஆழிச் செவிலி&lt;br /&gt;ஏக்கக் கரையில் மோதி நுரைவாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_P58idDD7rtw/SuWnRIZh-PI/AAAAAAAAAA0/Kc5gvEqmN0A/s1600-h/asilomarwavesia3.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 200px; height: 133px;" src="http://1.bp.blogspot.com/_P58idDD7rtw/SuWnRIZh-PI/AAAAAAAAAA0/Kc5gvEqmN0A/s200/asilomarwavesia3.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5396903641227589874" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காலைப் பொழுது காசினி நோக்கப்&lt;br /&gt;பொழில்களைத் தேடிப் பொன்னெழில் சிந்திக்&lt;br /&gt;கீழைத் திசையில் கதிரினை விரித்துக்&lt;br /&gt;காதல் கதிரவன் கண் திறந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;சோம்பல் முறித்துச் சுந்தரப் பைங்கிளி&lt;br /&gt;சோபை நெளிப்புடன் வெளி வந்தாள்.&lt;br /&gt;ஆம்பல் பூத்த அதரங்கள் நெகிழ&lt;br /&gt;அன்றைய கடமைகள் ஆற்ற வந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;கற்றைக் குழலது காற்றிடை நெளிய&lt;br /&gt;காவியப் பூங்கொடி கலகலக்க - அவள்&lt;br /&gt;இற்றைத் தோழர்கள் இறக்கைகள் சிலுப்பி&lt;br /&gt;இவளின் வரவை நாடின.&lt;br /&gt;&lt;br /&gt;விடியலின் முகப்பில் வீரியம் பிறக்க&lt;br /&gt;கூவலும், குதிப்பும் கூட்டுப் பரபரப்பும்&lt;br /&gt;உலோக வலையை உலுக்கிப் பார்க்கும்&lt;br /&gt;செந்நிறம் ஏறிய செல்ல அலகுகளும்&lt;br /&gt;குறுகுறுவென சிறு குண்டுமணிகளாய்&lt;br /&gt;பெருநகை காட்டும் பண்ணிசைக் கூட்டமாய்&lt;br /&gt;கூட்டைப் பிரிக்கும் பேராரவாரம்.&lt;br /&gt;&lt;br /&gt;உவகை பொங்க உள்ளகம் சிரித்தவள்&lt;br /&gt;உலோக வலையைத் திறந்திட&lt;br /&gt;மகிழ்முகம் ஏந்திய மண்நிறப் பஞ்சுகள்&lt;br /&gt;செட்டைகள் விரித்துச் சிலிர்த்தன.&lt;br /&gt;அவை&lt;br /&gt;கூட்டுத்தாவல், குழுமச்சூழ்வென&lt;br /&gt;கொக்கரிப்புக்களை நிறைத்தபடி&lt;br /&gt;ஊட்டம் சேர்க்கும் உணவிற்காக&lt;br /&gt;அவளைச் சுற்றிச் சூழ்ந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_P58idDD7rtw/SuWnVg0ndCI/AAAAAAAAAA8/8qBKTYfNWoo/s1600-h/gbol25322uz5.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 200px; height: 150px;" src="http://1.bp.blogspot.com/_P58idDD7rtw/SuWnVg0ndCI/AAAAAAAAAA8/8qBKTYfNWoo/s200/gbol25322uz5.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5396903716503122978" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவள்...           .&lt;br /&gt;இக்காவியத்தின் அவல்&lt;br /&gt;கொறித்துப் பார்க்கவும், கொள்கை ஏற்றவும்,&lt;br /&gt;இரசித்து நோக்கவும், இராச்சியம் காக்கவும்&lt;br /&gt;மேதினி எழுந்த மேதை!&lt;br /&gt;&lt;br /&gt;அவள்              .&lt;br /&gt;எழில் கொஞ்சும் குஞ்சுகளை - தன்&lt;br /&gt;மொழி கொண்டு கொஞ்சுவாள்.&lt;br /&gt;நல்பொழில் நோக்கில்&lt;br /&gt;புலன் மயங்கித் தன்&lt;br /&gt;மொழி மறந்து போவாள்.&lt;br /&gt;&lt;br /&gt;செழிப்பான அவள் நாமம்&lt;br /&gt;“செல்வி” எனச் செப்பிடுவோம்.&lt;br /&gt;சலிக்காமல் அவள் கதைக்கு&lt;br /&gt;சிந்தைகளைத் திறந்து வைப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;பருவகால இடப்பெயர்வால்&lt;br /&gt;பட்டாம் பூச்சிப்படைகள்&lt;br /&gt;பாவையிவளின் மனதை ஈர்த்து&lt;br /&gt;பரபரத்துப் பறந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;விழிகள் விரித்த இளைய குமரி&lt;br /&gt;கைகள் உயர்த்திக் குதித்தாள்.&lt;br /&gt;எட்டவில்லை என்று மீண்டும்&lt;br /&gt;எம்பி எம்பிக் குதித்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;'அம்மா"&lt;br /&gt;ஈனசுரத்தில் இளமங்கை&lt;br /&gt;வலியகுரல் தளர்ந்தாள்.&lt;br /&gt;மேனி நடுங்க, மெல்ல ஒடுங்கி&lt;br /&gt;மேதினியில் பணிந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;மொட்டொன்று சட்டென்று&lt;br /&gt;முகை அவிழ்த்துக் கொண்டது.&lt;br /&gt;கண்களில் மருட்சி வர&lt;br /&gt;காந்த விழிகள் நிறைந்தன.&lt;br /&gt;உணர்வுகளில் மாற்றம்&lt;br /&gt;உதடுகள் துடித்தன.&lt;br /&gt;&lt;br /&gt;நிமிர்ந்த தலை நிலம் நோக்க&lt;br /&gt;சின்னவளின் ஆடையிலே&lt;br /&gt;செம்பூக்கள் பூத்தன.&lt;br /&gt;அவை மெல்ல மெல்ல&lt;br /&gt;அடர்ந்து சித்திரங்கள் தீட்டின.&lt;br /&gt;&lt;br /&gt;அடுக்களையால் வெளியே வந்த&lt;br /&gt;அன்னையவள் பூரணத்தின்&lt;br /&gt;அருமை மகள் நிலை உணர்ந்து&lt;br /&gt;அகத்தில் களிப்பு சூழ்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;“பூப்படைந்தாள் புதுப் பெண்ணாய்&lt;br /&gt;பூரணியின் மகளாம்” என&lt;br /&gt;நாப்பரப்பல் - ஊரின் நடப்பாகி நகர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நண்பிகள் பட்டாளம் நகைப்பிற்கு - சில&lt;br /&gt;வம்பிகள் அலைந்தார்கள்&lt;br /&gt;வம்பிற்கு! - இவள்&lt;br /&gt;பண்பியல் முன்னே அவையெல்லாம்&lt;br /&gt;பலனற்றுப் போகுமென்று யார் நினைத்தார்?&lt;br /&gt;&lt;br /&gt;சீர் செய்தார் தாய்மாமன்&lt;br /&gt;எழில் சித்திரமாய் செல்வி.&lt;br /&gt;ஊர் முழுக்க வைக்காத கண் இல்லை - தனி&lt;br /&gt;உவகையே கொள்ளாத யுவன் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஓவியப் பெண்ணாய் காவிய நாயகி&lt;br /&gt;கருத்தில் நிறைத்த கணங்களை ஏந்தி&lt;br /&gt;இரசித்தது போதும்.&lt;br /&gt;&lt;br /&gt;மனதினைக் கவர்ந்த வனக்கிளி அவளின்&lt;br /&gt;கனவினை வசைக்கும் காவலன் நாடி&lt;br /&gt;காவியத் திசையில் கால்களை செலுத்தி&lt;br /&gt;&lt;br /&gt;வாருங்கள்!.....&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு பக்கம் இதிலுளது!&lt;br /&gt;அங்குதான் இவளின் விதியுளது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6925413834765719932-6227149120018214990?l=venkaiyan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://venkaiyan.blogspot.com/feeds/6227149120018214990/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://venkaiyan.blogspot.com/2009/10/1.html#comment-form' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6925413834765719932/posts/default/6227149120018214990'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6925413834765719932/posts/default/6227149120018214990'/><link rel='alternate' type='text/html' href='http://venkaiyan.blogspot.com/2009/10/1.html' title='அங்கம் 1'/><author><name>வேங்கையன் பூங்கொடி (காவியம்)</name><uri>http://www.blogger.com/profile/03445322919374394926</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://1.bp.blogspot.com/-yJU2OVtkJVc/TeJSVjeGpMI/AAAAAAAAABw/BetBpneXF6I/s220/54526902.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_P58idDD7rtw/SuWnKyWv39I/AAAAAAAAAAs/FsfU8hPnvKM/s72-c/birdflowerir1.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6925413834765719932.post-6768429813807092516</id><published>2009-10-25T07:20:00.001-07:00</published><updated>2009-10-26T06:53:12.909-07:00</updated><title type='text'>அங்கம் 2</title><content type='html'>&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;இடர் காடு&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கவனமாக வாருங்கள்!&lt;br /&gt;குண்டுகளும், எறிகணையும்&lt;br /&gt;உயிர் உரசி உலவும் காவலரன் மத்திக்கே&lt;br /&gt;இக்காவியத்தால் நுழைய வேண்டும்!&lt;br /&gt;உயிர் காப்புப் பயிற்சி உங்களுக்கு அவசியம்.&lt;br /&gt;&lt;br /&gt;கல்வியில் சிறந்தோன் - இவன்&lt;br /&gt;கலைகளால் உயர்ந்தோன்&lt;br /&gt;சிந்தை நிறை பண்பினன்.&lt;br /&gt;வெள்ளிச் சிலுவையைத் தாங்கியோன்!&lt;br /&gt;தமிழ் அன்னைக்கு ஒரு பிள்ளை&lt;br /&gt;தன் தாயிற்கு தனிப்பிள்ளை&lt;br /&gt;மண்மீட்புப் பணியிலே பாலமிடும் அணிற்பிள்ளை.&lt;br /&gt;&lt;br /&gt;ஈழ மீட்புப் போரிலே வேங்கைகள் தனிரகம்&lt;br /&gt;தாய்மண் விடிவிற்காய் ஆகிடுவர் கற்பூரம்&lt;br /&gt;வீரத்தில் உயர்தரம் வீம்பின்றி&lt;br /&gt;செய்யும் செயல்களில் கம்பீரம்&lt;br /&gt;இவர்களுடன் இணைந்த இவனும் ஒரு ரகம்.&lt;br /&gt;&lt;br /&gt;போராடப் பிறந்தவன்&lt;br /&gt;எம்மண்ணில் வேரோடிய எதிரிகளை&lt;br /&gt;வேரறுக்க நிமிர்ந்தவன்.&lt;br /&gt;தலைவன் சிந்தையிலே தன்னை நிறைத்தவன்&lt;br /&gt;சொல்லெடுத்துப் பாடிட ஈடில்லா ஆண்மகன்.&lt;br /&gt;&lt;br /&gt;இவனுக்கு அன்னை இட்ட பெயர்&lt;br /&gt;"அன்ரனி"&lt;br /&gt;எம் அண்ணன் இட்ட பெயர்&lt;br /&gt;"சேது"&lt;br /&gt;முன்னை எங்கள் சந்ததியர் முடியாட்சி செய்த நாடு&lt;br /&gt;பின் நாளில் சிங்களத்தின் சூழ்ச்சியினால் இடர்காடு&lt;br /&gt;இஃதே&lt;br /&gt;இன்னவன் இதயமதில் மண்தாயை மீட்கும்&lt;br /&gt;விடியல் நெருப்பேற்ற, - அதில்&lt;br /&gt;இலக்கெடுத்து தனை தொடுக்க,&lt;br /&gt;அதன் வழியே&lt;br /&gt;இன்று இந்த காவலரன்&lt;br /&gt;இவனுடைய நிலை பகரும்.&lt;br /&gt;&lt;br /&gt;செந்நீரில் குளிக்கும் அன்னை நிலங்காக்க&lt;br /&gt;விழித்த.... இவன் கண்மணிகள்&lt;br /&gt;ஓய்வெடுத்துக் கனகாலம்.&lt;br /&gt;&lt;br /&gt;வெட்ட வெளி வானத்தில் வெய்யவன் கொதித்திருப்பான்.&lt;br /&gt;எட்டும் கைத் தூரத்தில் எதிரிப்படை நின்றிருக்கும்&lt;br /&gt;வெட்டப்பட்ட குழிகளுக்குள் இவனும், இவன் தோழர்களும்&lt;br /&gt;வெந்தணலில் வாட்டி விட்ட சுட்ட பழம் போலிருப்பர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_P58idDD7rtw/SuWpM9Q_e-I/AAAAAAAAABM/TxKpP2bS8Ho/s1600-h/b212khesanhbunkermb3.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 200px; height: 154px;" src="http://2.bp.blogspot.com/_P58idDD7rtw/SuWpM9Q_e-I/AAAAAAAAABM/TxKpP2bS8Ho/s200/b212khesanhbunkermb3.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5396905768542764002" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திட்டமிட்டு எதிரிப்படை திக்கெட்டும் முட்டி, முட்டி&lt;br /&gt;தட்டுப்பட்ட இடமெல்லாம் தாக்குதலை முன்னெடுக்கும்.&lt;br /&gt;எட்டும் ஓர் அடியினிலும் எதிரி வீசும் எறிகணைகள்&lt;br /&gt;பட்டுப் பட்டு வெடிக்கையிலே பல தோழர் துடித்திறப்பர்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனையும் கண்முன்னே இமயமாய் விரிந்திருக்கும்&lt;br /&gt;இவன் விழிகளில் நீர் சிறிதேனும் கசியாது&lt;br /&gt;இறுகிய அகத்தினுள் சிறு தீப்பொறிகள் பூக்கும்&lt;br /&gt;அவை&lt;br /&gt;விழிமூடித் திறப்பதற்குள் விசுபரூபம் எடுக்கும்&lt;br /&gt;விரலிடுக்கில் விசை அழுத்த துப்பாக்கி கனலும்&lt;br /&gt;சடசடென்று வேட்டுகள் செருக்களத்தில் சீறும்.&lt;br /&gt;&lt;br /&gt;எடுத்து அடி வைக்கின்ற படைகள் நோக்கிப் பாயும்&lt;br /&gt;குண்டுகளால்......&lt;br /&gt;அடுத்த அடி வைக்கும் எதிரி களத்தில் சாவான்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனையும் முடிந்த பின்னால் தோழர் உடல் அணைப்பான்&lt;br /&gt;தேம்பி அழும் நெஞ்சோடு தோளில் மெல்லச் சுமப்பான்.&lt;br /&gt;உயிர் ஈந்த வீரர்களின் உறைவிடத்தே சென்று&lt;br /&gt;தோழர் வித்துடலை விதைத்த பின்&lt;br /&gt;கண்சோர்ந்து காயமது களைத்தாடும் போதே&lt;br /&gt;இவன்&lt;br /&gt;மெய் தாங்கும் விழுபுண்ணை மெய்யென்று உணர்வான்.&lt;br /&gt;&lt;br /&gt;விருந்திட்டு இவனைத் தேற்ற வீரத்தாய்கள் காத்திருப்பர்&lt;br /&gt;இவனோ....... மருந்திட்ட காயம் ஆற&lt;br /&gt;மணித்துளிகள் போதுமென்பான்.&lt;br /&gt;குறைந்த நேரம் ஓய்வெடுப்பான்&lt;br /&gt;மீண்டும் விரைந்து காவலரன் நிறைத்திருப்பான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_P58idDD7rtw/SuWpRqxU4xI/AAAAAAAAABU/Fy1l8T80gcs/s1600-h/apachefk6.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 200px; height: 143px;" src="http://2.bp.blogspot.com/_P58idDD7rtw/SuWpRqxU4xI/AAAAAAAAABU/Fy1l8T80gcs/s200/apachefk6.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5396905849477456658" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தோற்றோடிப் போன படை காற்றோடு கதை சொல்லும்&lt;br /&gt;ஆட்காட்டிக் குருவிபோல ஆர்ப்பரித்துக் கெலிகள் வரும்&lt;br /&gt;எம்மினத்தைச்....... சாக்காட்டி தொலைப்பதற்காய்&lt;br /&gt;சரம், சரமாய் செல்லடிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கொண்டு..... "வானத்தில் பொம்மர்" என்று&lt;br /&gt;வாய் சொல்லி முடிக்குமுன்னே&lt;br /&gt;வாரணத்தில் வந்த படை வரிசையாகக் குண்டெறியும்.&lt;br /&gt;"ம்" என்றால் எழுநூறும், எண்ணூறும்&lt;br /&gt;"அம்" என்றால் ஆயிரம் ஆகாதோ?"&lt;br /&gt;என்றான் கவி படைக்கும் காளமேகம் அன்று,&lt;br /&gt;&lt;br /&gt;"ம்" என்றால் ஏழாயிரம், எண்ணாயிரம்&lt;br /&gt;"அம்" என்றால் ஆயிர பதினாயிரம்&lt;br /&gt;குண்டுகள் குதறும் போர்க்கால மேகமிது!&lt;br /&gt;என்கிறாள் ஈழவள் இன்று&lt;br /&gt;&lt;br /&gt;இதுவொன்றே&lt;br /&gt;இயல்பென்ற வாழ்வான நிலையில்&lt;br /&gt;இக்காவியக் கதை நகரும் - நிகழ்&lt;br /&gt;காலங்களின் உயிர்ப்பாய். அவ்வழியில்....&lt;br /&gt;&lt;br /&gt;நாட்காட்டி தன்னிதழைப் பொலபொலென்று உதிர்க்கும்.&lt;br /&gt;நடக்கின்ற அனர்த்தங்களோ சிறிதேனும் குறையாது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6925413834765719932-6768429813807092516?l=venkaiyan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://venkaiyan.blogspot.com/feeds/6768429813807092516/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://venkaiyan.blogspot.com/2009/10/2.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6925413834765719932/posts/default/6768429813807092516'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6925413834765719932/posts/default/6768429813807092516'/><link rel='alternate' type='text/html' href='http://venkaiyan.blogspot.com/2009/10/2.html' title='அங்கம் 2'/><author><name>வேங்கையன் பூங்கொடி (காவியம்)</name><uri>http://www.blogger.com/profile/03445322919374394926</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://1.bp.blogspot.com/-yJU2OVtkJVc/TeJSVjeGpMI/AAAAAAAAABw/BetBpneXF6I/s220/54526902.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_P58idDD7rtw/SuWpM9Q_e-I/AAAAAAAAABM/TxKpP2bS8Ho/s72-c/b212khesanhbunkermb3.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6925413834765719932.post-3691546678160780381</id><published>2009-10-25T07:18:00.001-07:00</published><updated>2009-10-25T09:42:08.737-07:00</updated><title type='text'>அங்கம் 3</title><content type='html'>&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பிரியசகி&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முகாம்களின் ஓரங்களில் முற்றுகைகள் நீடிக்கும்.&lt;br /&gt;மூன்று நான்கு நாட்களில் ஊருக்கு இது பழகிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளிகள் திறக்கும் பல்சரக்குக் கடைகளில்&lt;br /&gt;வணிகம் சிறக்கும். சந்தைகள் கூடும்&lt;br /&gt;சந்திகளில் புதிய சங்கதிகள் ஒலிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;"கோ" உறையும் "இல்"களில் கொடிகள் உயரும்.&lt;br /&gt;கொட்டுமேளம் கொட்டிக் கொண்டாட்டம் நிறையும்.&lt;br /&gt;உடுக்கடிப்பில் கரகாட்டம் உச்சம் நோக்க,&lt;br /&gt;ஊர்மனைத் திரைகளிலே நிதர்சனம் விழித்திருக்கும்.&lt;br /&gt;வடமறவர் ஆட்சிக்கு வழமையான வாழ்வு இது.&lt;br /&gt;-------------&lt;br /&gt;&lt;br /&gt;காளை மாட்டின் கழுத்துமணி கிண்கிணிக்க&lt;br /&gt;கிடுகும், பொச்சும் சுமக்கும் அச்சாணி வண்டிகள்,&lt;br /&gt;நிலம் உழுது களை களைந்து&lt;br /&gt;உற்பத்தி பெருக்கி உழைக்கும் உழவர்குலம்,&lt;br /&gt;&lt;br /&gt;கயல் துள்ளும் கடல் நடுவே&lt;br /&gt;கரையாத திடத்தோடு வலை வீசும் கடல்மைந்தர்,&lt;br /&gt;பசு சுரக்கும் பால் கறந்து பக்குவமாய் சுமந்து&lt;br /&gt;படலை தட்டும் பால்க்காரர்,&lt;br /&gt;&lt;br /&gt;தேவதைகள் உலவுமுன்றல் கூட்டித்&lt;br /&gt;தண்ணீர் தெளித்து தரணியிலே&lt;br /&gt;கோலமிடும் தமிழ்ப்பாவையர்,&lt;br /&gt;இதற்கு மேல்&lt;br /&gt;அதிகாலை என்பதற்கு ஆதாரம் வேண்டுமா?&lt;br /&gt;&lt;br /&gt;போர்க்காலச் சூழல்தான் இருப்பினும்,&lt;br /&gt;ஊருக்கு இது பழகியதால்&lt;br /&gt;இத்தனையும் இயல்பாய் நிகழும்.&lt;br /&gt;&lt;br /&gt;இரட்டைப் பின்னலிட்டு&lt;br /&gt;கட்டைக் கறுப்புக் குஞ்சம் கட்டி&lt;br /&gt;பள்ளிச் சீருடையில்&lt;br /&gt;கல்வி கற்கச் செல்வாள் செல்வி&lt;br /&gt;குறுக்கொழுங்கை தாண்டிட&lt;br /&gt;ஓர் எழிற்குமரி சேர்ந்திடுவாள்.&lt;br /&gt;&lt;br /&gt;இவள் விருப்புடனே&lt;br /&gt;நட்பியற்றும் பிரியசகியே இப்பூங்குழலி!&lt;br /&gt;&lt;br /&gt;இவள் வனப்பு தாமரை அவள் அழகு அல்லி&lt;br /&gt;இவள் விழிகள் கயல்கள் அவள் கண்கள் மான்கள்&lt;br /&gt;உதடுகள் ரோசா இதழ்கள் என்றால்&lt;br /&gt;அடுத்தவளதோ கொவ்வைக் கனிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;இவளோ பிள்ளைத் தமிழ் அவளோ கிள்ளைத் தமிழ்&lt;br /&gt;இருவரும் இரண்டு எழில்கள்&lt;br /&gt;இணைந்தே சுற்றும் பொழில்கள்&lt;br /&gt;&lt;br /&gt;இவளின் சித்தம் எதுவோ?&lt;br /&gt;அவளின் வாயில் முத்து!&lt;br /&gt;பள்ளித் தோழிகள் மட்டுமல்ல&lt;br /&gt;மனதைப் பகிரும் நட்பில் இணைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;சிங்களப் படைகள் என்றதும் ஏங்கிச்&lt;br /&gt;சிறகை ஒடுக்கிச் சிறு புள்ளாகும்&lt;br /&gt;தங்களின் வகுப்புத் தோழியர் கண்டு&lt;br /&gt;தாங்கொணாக் கோபம் கொள்ளும் பூக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எதிரியை எதிர்க்கத் துணியனும் என்பர்.&lt;br /&gt;எழுச்சியில் பெண்கள் இணையனும் என்பர்.&lt;br /&gt;குறைவிலா பலத்தை அடையனும் என்பர்.&lt;br /&gt;இந்தக்..            .&lt;br /&gt;குவலயம் மெச்சவே நிமிரனும் என்பர்.&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளியில் சுட்டிப் பெண்களாய் இருந்தர்.&lt;br /&gt;தலைமை மாணவக் குழுவிலும் திகழ்ந்தர்.&lt;br /&gt;எள்ளென எடுத்த பொருளினை எல்லாம்&lt;br /&gt;எண்ணெயாய் வடித்து ஏற்றம் பெற்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பப்போ தலைமைக் குழுவினர் கூடுவர்&lt;br /&gt;அதனிலே செயற்படு திட்டங்கள் தீட்டுவர்.&lt;br /&gt;இப்போதும் இங்கு இணைந்தனர் அனைவரும்&lt;br /&gt;இதற்குக் காரணம் இனிவரும் சங்கதி!&lt;br /&gt;&lt;br /&gt;இன ஒடுக்குமுறைக்கு எதிராக எழுந்து&lt;br /&gt;ஈழமண் மீட்க இரும்பூத்த இன்றைய போராட்டம்!&lt;br /&gt;இதனை அடக்கி ஒடுக்க இனவெறியர்&lt;br /&gt;மண்ணோடு மக்களையும், வாழ்வியலையும் சிதைப்பர்&lt;br /&gt;அரசியல் சூத்திரம் அறிந்தவர் அறிவர்.&lt;br /&gt;&lt;br /&gt;மக்கள் இணைப்பே போராளிக் குழுக்கள்&lt;br /&gt;மனிதத்தைக் காப்பதே தலையாய கடமை&lt;br /&gt;ஊருராய் இந்நிலை எடுத்து இயம்பியே&lt;br /&gt;இன்னுயிர் காக்க விழைந்தனர் புலியணி&lt;br /&gt;&lt;br /&gt;முட்டிய வயிறுகள் ஒட்டியே ஒறுத்திட&lt;br /&gt;பட்டினி நிலை வரும்&lt;br /&gt;உடல் பட்டிடும் இரணத்தை ஆற்றிடும்&lt;br /&gt;மருந்திற்கு அதர்மமாய் தடைகள் வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;'உடனடித் தேவையும், உரிய சிகிச்சையும்&lt;br /&gt;ஒருமித்து இல்லாவிடின் இதயங்கள் கதற,&lt;br /&gt;உயிர் வலி மிகுந்து உடல் நிலம் சாய்ந்துவிடும்.'&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப் புலிகளின் வீரத் தளபதி&lt;br /&gt;வீரியத்துடன் உரைக்க&lt;br /&gt;கூடிய மாணவமணிகள்&lt;br /&gt;ஓர்கணம் மருண்டு அரண்டிருந்தர்.&lt;br /&gt;&lt;br /&gt;உடனடிச் சிகிச்சையே உயிர் காக்கும் ஆயுதம்&lt;br /&gt;அவசர வைத்தியம் அனைவரும் கற்கலாம்.&lt;br /&gt;அண்டை அயலிலே குண்டினால், செல்லினால்&lt;br /&gt;காயம் பட்ட உயிர்களைக் காக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளிகள் தோறும் முதலுதவிப் பயிற்சிகள்&lt;br /&gt;பயின்றிடல் வேண்டும் மாணவக் குழுக்கள்&lt;br /&gt;ஊரே......... கொள்ளிடம் ஆகிடும்&lt;br /&gt;நிலையினைத் தவிர்க்க இணையும்&lt;br /&gt;நங்கையர் கரங்களும் நலிவினை வெல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நற்பணி ஆற்ற வேங்கையர் செப்பினர்.&lt;br /&gt;மறவர் இயம்பிடும் சேதியைக் கேட்டதும்&lt;br /&gt;மங்கையர் தமக்குள் உறுதியும் பூண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;எம் மக்களின் இன்னலை மாற்றி எழுதிட&lt;br /&gt;இம்மண்ணின் மீது மறப்போர் வளரும்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னலைக் களைந்திடும் - இவ்&lt;br /&gt;இலட்சியப் போரிலே&lt;br /&gt;இரத்தம் வீணே  இகத்தில் ஓடியே&lt;br /&gt;இங்கெச் சாவும் இனிமேல் இராதென - தமிழ்&lt;br /&gt;ஈழத்தின் மீது சத்தியம் செய்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்றே தொடங்கிற்று அவசர பயிற்சிகள்&lt;br /&gt;கவனமாகக் கற்றனர் கன்னியரும், காளையரும்&lt;br /&gt;நன்றே அமைந்தது&lt;br /&gt;நாளாக அவ்வூரில் நாலு திக்கிலும்&lt;br /&gt;முதலுதவி வழங்கிட நலன்பேண் நிலையங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்த நாட்களில்&lt;br /&gt;தோழியர் இருவரும் தொண்டர்கள் ஆனார்கள்&lt;br /&gt;ஊழிப் போரிலே ஊர்படும் ரணத்திற்கு&lt;br /&gt;உடனடிச் சிகிச்சைகள் உவந்து வழங்கினர்.&lt;br /&gt;உயிர்களைக் காத்திடும் உன்னத பணியிலே&lt;br /&gt;இச் சாவித்திரிகள்  இயமனை செயித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்திடும் பணியிலே சோர்ந்ததும் இல்லை&lt;br /&gt;இவர்கள்&lt;br /&gt;சிகப்புத் துளி கண்டு தேம்பியதும் இல்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6925413834765719932-3691546678160780381?l=venkaiyan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://venkaiyan.blogspot.com/feeds/3691546678160780381/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://venkaiyan.blogspot.com/2009/10/3.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6925413834765719932/posts/default/3691546678160780381'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6925413834765719932/posts/default/3691546678160780381'/><link rel='alternate' type='text/html' href='http://venkaiyan.blogspot.com/2009/10/3.html' title='அங்கம் 3'/><author><name>வேங்கையன் பூங்கொடி (காவியம்)</name><uri>http://www.blogger.com/profile/03445322919374394926</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://1.bp.blogspot.com/-yJU2OVtkJVc/TeJSVjeGpMI/AAAAAAAAABw/BetBpneXF6I/s220/54526902.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6925413834765719932.post-5877846821141484754</id><published>2009-10-25T07:16:00.001-07:00</published><updated>2009-10-25T07:16:35.999-07:00</updated><title type='text'>அங்கம் 4</title><content type='html'>&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;கூற்றுவன் கேட்டால்...&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காலதேவன் கட்டளையால் காலடியை விரைவாக்க&lt;br /&gt;தாளடியில் தணல் கக்கல் தணலவனின் புதுயுக்தி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கொப்புளிக்கும் கொப்பளத்தின் கொடிய வாதை கண்டு,&lt;br /&gt;வேப்ப மரச் சாமரங்கள் வெம்மையோடு தர்க்கிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வேளை&lt;br /&gt;ஊர்க்கோழி விற்க வந்த ஊரி வீட்டுப் பொன்னம்மா&lt;br /&gt;மோர்க்காரக் கந்தனுடன் முறைத்தபடி நடக்கின்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;வில்வமர ஆச்சி வைத்த நெய்சோற்றின் வாசனையும்,&lt;br /&gt;முல்லைவன மலர்கை மணங்கமழும் மீன்கறியும்,&lt;br /&gt;&lt;br /&gt;காற்றில் ஏறிக் கதைபேசி பல நாசிகளை உரசிவிட&lt;br /&gt;நாவூறி நீர் வடிதல் நளினமாக நிகழ்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;முட்டி நிறைத்த கள் அருந்தி&lt;br /&gt;போதை முற்றிப்போன குப்பன்&lt;br /&gt;அர்த்தமுள்ள இந்துமத தத்துவத்தைப் பாடிவர&lt;br /&gt;பெருஞ்சத்தமுடன் வெடித்த வெடி - அவனைச்&lt;br /&gt;சச்சரவுக்கு இழுத்தது;&lt;br /&gt;&lt;br /&gt;வந்த வழி தள்ளாட,&lt;br /&gt;சிந்தும் சொற்கள் தடம்புரள,&lt;br /&gt;தூசனைகள் துள்ளாட,&lt;br /&gt;பேரினவாதியரைப் பெருஞ் சண்டைக்கிழுத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆற்றுவார் இன்றி அவனியல் தொடரவே&lt;br /&gt;தோற்றமா காளியராய் தோன்றிய நங்கையர்கள்&lt;br /&gt;அங்கமைந்த........&lt;br /&gt;முதலுதவி நிலையத்தின் முக்கிய தொண்டர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கள்போதை கொண்ட குப்பன்&lt;br /&gt;விழி விரித்து, உடல் நெளித்து,&lt;br /&gt;உள்ளுக்குப் போனவரால் உன்மத்தன் போலானான்.&lt;br /&gt;&lt;br /&gt;சுயம் இழந்த அவனுக்கு சுந்தரியர் சினம் பெரிதா?&lt;br /&gt;உறுமினான், செருமினான் - தன்நிலையின்&lt;br /&gt;காரணத்தைப் பொருமினான்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே நேரம்,&lt;br /&gt;உதிரத்தில் குளித்து, ஈரமுற்ற மேனியனாய்,&lt;br /&gt;சுயமிழக்கும் தோழனைச் சுமந்து முதலுதவி நாடிய&lt;br /&gt;ஓர் செயல்கள வீரன்&lt;br /&gt;குப்பனின் போதையை குலைத்தெறிந்து வென்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;செருக்களச் செம்புண் ஏற்ற செம்மலினைக் காக்க சேது,&lt;br /&gt;விரைந்தோடி வந்தநிலை விளக்கி சொல்வதென்றால்&lt;br /&gt;வளி ஒன்றால்தான் முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஊற்றெடுத்த உதிர ஆற்றில், உருக்குலையும் இச்சகாவை&lt;br /&gt;கூற்றுவன் கேட்பதற்காய் காற்றாக விடுவானா?&lt;br /&gt;&lt;br /&gt;எத்தனையோ தோழரினை&lt;br /&gt;எமன் பிடுங்கத் தோற்றவன்தான்......&lt;br /&gt;இன்னவனை மட்டுமென்ன எளிதாகக் கொடுப்பானா?&lt;br /&gt;&lt;br /&gt;கண்மணிகள் பூஞ்சையிட களைத்தயர்வு ஏற்றிருக்கும்&lt;br /&gt;இன்னவன் நாமம் செப்பில் இனிக்கின்ற 'இனியவன்".&lt;br /&gt;&lt;br /&gt;சின்னவன் சேது இங்கே தன்நிலை இழக்கின்றான்.&lt;br /&gt;இன்தமிழ் தோழனுக்காய் செந்தணலில் துடிக்கின்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;சயனத்தைத் தெளிவிக்கும் சிகிச்சையினை அளித்தபடி - ஓர&lt;br /&gt;நயனத்தில் சேதவன் நிலை கண்ட மங்கையரின்&lt;br /&gt;மனதிற்குள் பயம் மெல்ல பல்லிளிக்கத் தொடங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;நாழிகைகள் ஆக, ஆக மெலிந்த நண்பன் நலம் சூம்ப&lt;br /&gt;சேயிழைகள் மீது சேது, - பெருஞ் சினத்தோடு சீறி நின்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏந்திழைகள் மெல்லமெல்ல ஆமையாகும் வேளையிலும்&lt;br /&gt;எளிமையான மருத்துவத்தை ஏற்றுப் பணியாற்றினர்.&lt;br /&gt;&lt;br /&gt;நிமிடங்களின் நகர்வுகள் நீள்கதையாய் ஆகுமுன்னர்&lt;br /&gt;காற்றைக் கிழித்து ஒரு கருநீல வேன் வந்து&lt;br /&gt;ஏற்றமிகு மறவனேந்தி, எமனுக்குச் சவால் விட்டு&lt;br /&gt;வீதிவழி புழுதி பொங்க, விரைந்தோடி மறைந்தது.&lt;br /&gt;ஆசுவாசமாக சேது....&lt;br /&gt;சிந்தை தணியச்சினம் துறந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;கண்முன்னே கலக்கமுற்று இருபெண்மை தவித்திருக்க,&lt;br /&gt;இன்னவனின் ஈர்விழிகள் இருவரிலும் தொக்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;படபடப்புக் கொண்டிருந்த பருவப் பூங்குழலி - இவன்&lt;br /&gt;நேரிட்ட விழியை ஏறெடுத்துப் பார்த்தாள்.&lt;br /&gt;பதைப்புடனே நின்றிருந்த பைந்தமிழ் செல்வி&lt;br /&gt;தன்கயலை நிலம்நோக்கி மெல்லச் சாய்த்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;பூங்குழலி மான்விழியில் பூக்கள் மலர்ந்தன.&lt;br /&gt;ஈர்க்கும் பார்வையுடன் இங்கெதிரே நின்றிருக்கும்&lt;br /&gt;ஈழம் மீட்கும் இளந்தமிழ் வீரனிவன்&lt;br /&gt;இவள் நோக்கில் புதிய சொந்தம் ஆனான்.&lt;br /&gt;&lt;br /&gt;விபத்தொன்றில் பறிகொடுத்த தாய்மடி உறவு&lt;br /&gt;இகத்தினில் இன்று காட்சி தரக் கண்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அகன்ற நெற்றியும், நேரிய புருவமும்,&lt;br /&gt;எவரையும் ஊடுருவும் ஆளுமை விழிகளும்,&lt;br /&gt;கூரிய நாசியும், குவிந்த புன்னகையும்,&lt;br /&gt;ஆண்மைக்கே உரித்தான அழுத்த உதடுகளும்,&lt;br /&gt;அடர்த்தி நிறைந்த எடுப்பான மீசையும்,&lt;br /&gt;புடைத்த தோள்களும், நிமிர்ந்த மார்பும்,&lt;br /&gt;உரமது ஏறி உயர்ந்த கால்களும்,&lt;br /&gt;திடத்தை நிறைத்து திரண்ட கரங்களும்&lt;br /&gt;தன்னகம் கொண்ட- அந்த கம்பீரன் முகத்தை&lt;br /&gt;ஓர விழியாலும் ஏறெடுக்க இயலாது&lt;br /&gt;தோற்று இடறினாள் தோகையவள் செல்வி.&lt;br /&gt;&lt;br /&gt;இதயத்து ஓசை ஓங்கி ஒலித்தது.&lt;br /&gt;கைகளும், கால்களும் சில்லிட்டுச் சிலிர்த்தன.&lt;br /&gt;புருவங்கள் துடித்தன- ஏதோ&lt;br /&gt;புதுவித உணர்வொன்று புதிர்க்கோலம் போட்டது.&lt;br /&gt;சுவாசச் சுவரெங்கும் காற்று சுமையானது.&lt;br /&gt;நுதலில் நீர் துளிர்க்க,&lt;br /&gt;நா உலர்ந்து ஒட்டியது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6925413834765719932-5877846821141484754?l=venkaiyan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://venkaiyan.blogspot.com/feeds/5877846821141484754/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://venkaiyan.blogspot.com/2009/10/4.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6925413834765719932/posts/default/5877846821141484754'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6925413834765719932/posts/default/5877846821141484754'/><link rel='alternate' type='text/html' href='http://venkaiyan.blogspot.com/2009/10/4.html' title='அங்கம் 4'/><author><name>வேங்கையன் பூங்கொடி (காவியம்)</name><uri>http://www.blogger.com/profile/03445322919374394926</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://1.bp.blogspot.com/-yJU2OVtkJVc/TeJSVjeGpMI/AAAAAAAAABw/BetBpneXF6I/s220/54526902.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6925413834765719932.post-8589367858260117670</id><published>2009-10-25T07:14:00.000-07:00</published><updated>2009-10-25T07:15:06.803-07:00</updated><title type='text'>அங்கம் 5</title><content type='html'>&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;மனப்புதிர்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வேலாடும் விழிகளிலே வீரம் விளையாடும் - அது&lt;br /&gt;வெட்கித்து நிலம் நோக்கில் நாணம் அரசாளும்.&lt;br /&gt;&lt;br /&gt;கோலமிடும் தோகையவள் குறுநகையில் சிவக்க&lt;br /&gt;காலமது மனங்கனிய காளையவன் நெகிழ்ந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏறெடுத்துப் பார்த்தமகள் பாசக்கொடி ஆனாள்.&lt;br /&gt;ஓரவிழி தாழ்த்தியவள் கேள்விக் குறியானாள்.&lt;br /&gt;&lt;br /&gt;இவன்&lt;br /&gt;தேர்வெழுதும் மாணவனாய்&lt;br /&gt;திகைக்கின்ற வேளை- பெரும்&lt;br /&gt;மாயமது மனப்புதிரில் மேயுமான் ஆச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;'நா" என்ப திருப்பதிங்கே நகைப்பிற்கிடங் காட்டி&lt;br /&gt;மும்முனை உணர்வினுள்ளே மாபெரும் போட்டி!&lt;br /&gt;&lt;br /&gt;பூங்குழலி தேன்குரலால் புவியீர்ப்புக் காட்ட&lt;br /&gt;வானூர்தி தரைதட்ட வரிப்புலி விழித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;தீந்தமிழில் உரையாடி, தேன்பெயர்கள் பரிமாறி,&lt;br /&gt;காந்தமகள் ஈர்க்குமுன்னே கடமை வீரன் விடுபட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்றெழுத்துப் புத்தகத்தில் மூழ்க இருந்தவனை&lt;br /&gt;மூன்றெழுத்துச் சத்தியம் முன்னிழுத்து நிறுத்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆவல் கொண்ட துடிப்போடு அகம் இங்கு அல்லாட&lt;br /&gt;தாவலுடன் தேகம் அங்கே ‘நகர்" என்று பணித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;காவலரன் சேதுவை கடுகதியில் அழைத்தது.&lt;br /&gt;களம்நோக்கி அவன் கால்கள் காற்றாகி விரைந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;தீரப்புலி வீரன் சென்ற திக்குதனை நோக்கி&lt;br /&gt;சோர்வுற்றுப் பார்த்திருந்தாள் சுந்தரப் பாவை செல்வி.&lt;br /&gt;&lt;br /&gt;பூங்குழலி சகி முகத்தில் புதினத்தாள் படித்தாள்&lt;br /&gt;பொல்லாத பருவமடி என்று மனம் துடித்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;கண்சிமிட்டி கார்குழலி கதைபேசிச் சிரித்தாள்&lt;br /&gt;கையிரண்டால் முகம்மூடி, கனிமயிலோ சிவந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;மணித்துளிகள் ஆக ஆக மங்கையரின் களிப்பு&lt;br /&gt;மத்தாப்பைப் பார்த்த மழலையெனச் சிரித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வங்கனைகள் ஆனந்தம் அரைநாளாய் பார்த்து&lt;br /&gt;ஆதித்தன் அயர்வுடனே ஓய்வெடுக்கப் போனான்.&lt;br /&gt;-------------&lt;br /&gt;&lt;br /&gt;கிட்டிப்புல்லும், கிளித்தட்டும்,&lt;br /&gt;எட்டிப் பிடிக்கும் ஆமி, புலியும்,&lt;br /&gt;முற்ற வெளியில் எட்டுக் கோடும்,&lt;br /&gt;முகப்புத் திட்டில் பாண்டிக் குண்டும்,&lt;br /&gt;&lt;br /&gt;கபடி ஆட்டமும், கொக்கான் வெட்டியும்,&lt;br /&gt;சோகிகள் வீசி தாயவீடும்,&lt;br /&gt;ஒளித்துப் பிடித்துக் கல்லுக் குத்தியும்&lt;br /&gt; அகவைகேற்ற அவரவர் ஆட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;உடல்வலு சேர்க்கும் உதைபந்தும்,&lt;br /&gt;தோள்திடம் ஊட்டும் கரப்பந்தும்,&lt;br /&gt;மனமகிழ் பெண்களின் பூப்பந்தும்&lt;br /&gt;மாலையில் ஊரவர் மகிழ் விளையாட்டு.&lt;br /&gt;&lt;br /&gt;ஒட்டுக் குந்தி ஊர்ப்புதினமும்,&lt;br /&gt;திண்ணையில் கூடி திரண்ட சுற்றமும்,&lt;br /&gt;தட்டிக் கடையின் தனிச்சலசலப்பும்&lt;br /&gt;தழுவத் தழுவ மணித்துளி நகர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்திவானம் செம்மை சிந்திட&lt;br /&gt;அழகு முகில்கள் ஏந்தியது - அந்தி&lt;br /&gt;மந்தாரை குங்குமப் போர்வையை&lt;br /&gt;மாதுளம்பூக்கள் பழித்தன.&lt;br /&gt;&lt;br /&gt;மெல்லிசைதந்த புள்ளினம் - புதுப்புது&lt;br /&gt;மெட்டுகள் கட்டி இசைத்திட,&lt;br /&gt;மேய்ச்சல் முடித்த ஆடும், மாடும்&lt;br /&gt;வீடுகள் நோக்கி நடந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;சேவை மாற்றம் சேயிழை இருவரும்&lt;br /&gt;மனை சேரும் வழிகூட்ட - செழும்&lt;br /&gt;பாவை மனஇழை மோனம் பூண்டது.&lt;br /&gt;பாதை நீண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;கூடவந்தவள் குறுநகை புரிய,&lt;br /&gt;விடைதர மறந்து விட்டாள்.&lt;br /&gt; வாயிலா மடந்தை வண்ணப் பூங்கொடி&lt;br /&gt;வன்மொழி தொலைத்து விட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;மாயை தன்னை மணந்தது அறியாக்&lt;br /&gt;காதல் கவிந்தமகள். - பெரு நோயை&lt;br /&gt;அணைத்ததில் துளிர்ப்பைக் கண்டாள்.&lt;br /&gt;புதுத் துடிப்பை பெற்றெடுத்தாள்.&lt;br /&gt;------------------&lt;br /&gt;&lt;br /&gt;காசினி மெல்ல கங்குலை உடுத்த&lt;br /&gt;அந்திச்சந்திரன் வான் சந்திக்கு வந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;மெல்லிய கருக்கலில்&lt;br /&gt;மனக்கள்வனைக் கண்டபின்&lt;br /&gt;முல்லையும்,மல்லியும் முக்காடா போடும்?&lt;br /&gt;&lt;br /&gt;கன்னிமை துறந்து விரிந்து சிரித்தன.&lt;br /&gt;காமனை உசுப்பிக் கள்வெறி ஊட்டின.&lt;br /&gt;&lt;br /&gt;மொட்டுகள் கட்டவிழ்ந்தால் வண்டுகட்குக் கசக்குமா?&lt;br /&gt;மட்டு அருந்திக் கிடந்தன. மதி மயங்கிப் பறந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;மாருதம் முல்லைமணத் தேரிழுத்துக் கொண்டிருக்க,&lt;br /&gt;சேயிழை செல்விக்கு ஊண் பிடிக்கவில்லை&lt;br /&gt;உயிரெனும் வலைக்குள்ளே காதல் மீன் துடித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;விழிமூடும் இமைக்குள்ளே வேங்கையின் சீற்றம்.&lt;br /&gt;அது அர்த்தமேயின்றி வரைந்தது,&lt;br /&gt;அவள் அதரங்களில் புன்னகையோவியம்.&lt;br /&gt;&lt;br /&gt;இமைக்குள்ளே சீற்றத்தைச் சிறைப் பிடித்தவள்&lt;br /&gt;சினத்தை இரசிக்கும் கலை எங்கு கற்றாள்?&lt;br /&gt;&lt;br /&gt;விடிய மறுக்கும் இரவுப் பொழுது&lt;br /&gt;கடக்கும் கணங்களை மா யுகங்கள் ஆக்கின.&lt;br /&gt;&lt;br /&gt;தலைசாய்த்துக் கண்ணயர்தல் கனவாகிப் போக,&lt;br /&gt;பாயும், தலையணையும் பகை பொருட்கள் ஆகின.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6925413834765719932-8589367858260117670?l=venkaiyan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://venkaiyan.blogspot.com/feeds/8589367858260117670/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://venkaiyan.blogspot.com/2009/10/5.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6925413834765719932/posts/default/8589367858260117670'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6925413834765719932/posts/default/8589367858260117670'/><link rel='alternate' type='text/html' href='http://venkaiyan.blogspot.com/2009/10/5.html' title='அங்கம் 5'/><author><name>வேங்கையன் பூங்கொடி (காவியம்)</name><uri>http://www.blogger.com/profile/03445322919374394926</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://1.bp.blogspot.com/-yJU2OVtkJVc/TeJSVjeGpMI/AAAAAAAAABw/BetBpneXF6I/s220/54526902.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6925413834765719932.post-25781525256197544</id><published>2009-10-25T07:12:00.000-07:00</published><updated>2009-10-25T07:13:24.955-07:00</updated><title type='text'>அங்கம் 6</title><content type='html'>&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;அண்டத்தைக் கடந்தவள்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அல்லும், பகலும் நாட்களைக் கடத்தின.&lt;br /&gt;வாரத்தின் நகர்வு திங்களாய் மலர்ந்தது.&lt;br /&gt;திங்கள்கள் அசைந்து, காலாண்டை கடந்து&lt;br /&gt;அரையாண்டை நெருங்கி ஆறாக விழைந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;ஊர் அழிக்கக் கிளம்பும் சீர்கெட்ட படையடக்கி&lt;br /&gt;கூர் ஆயுத முனைக்குள்ளே.....&lt;br /&gt;ஈர்விழிகள் அயராது நிலங்காக்கும் களவீரரின்&lt;br /&gt;யாழ் அணித் தலைவன்,....&lt;br /&gt;முற்றுகையிட்டு எதிரிமுகாம் அழிக்கும்&lt;br /&gt;கெட்டிய பணி பற்றி அண்ணன் இட்ட கட்டளையாய்&lt;br /&gt;பற்பல செயற்பாட்டை எடுத்துரைத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் முன்&lt;br /&gt;செருக்கள வீரரிற்கு சில நாட்கள் ஓய்வு தந்து&lt;br /&gt;சுற்றத்தை கண்டு சீராடி வரப் பணித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இச்செருக்களத்தில், செங்குருதிக் குளத்தில்,&lt;br /&gt;ஓர்மம் மிகுந்து,......&lt;br /&gt;உயிர் பிரியும் கணத்தை எதிர் நோக்கும்&lt;br /&gt;இந்த இளைய புலி வீரர்கள்!&lt;br /&gt;ஆண்டு, அநுபவித்து உறவுக்குள் முகிழ்த்து&lt;br /&gt;போதுமடா சாமி என பற்றறுத்த துறவிகளா?&lt;br /&gt;&lt;br /&gt;இல்லையே! .&lt;br /&gt;ஆளுமையும், அநுபவிப்பும் உறவுகள் சங்கமிப்பும்&lt;br /&gt;உணர்வாலே அறியாத - இருந்தும்&lt;br /&gt;பற்றுகள் நிறைந்த பாசத் துறவிகள்&lt;br /&gt;&lt;br /&gt;தாயகப் பற்றினால்&lt;br /&gt;அனைத்தையும் ஒதுக்கிய இளைய ஞானிகள்&lt;br /&gt;&lt;br /&gt;யாழ் அணித் தளபதி செப்பிய கூற்றினால் - வீரர்களின்&lt;br /&gt;உள்ளத்து மூலையில் ஒதுங்கிய உறவுகள்&lt;br /&gt;உருப்பெற்று கண்முன்னே உலவத் தொடங்கினர்.&lt;br /&gt;&lt;br /&gt;உயிர் கசிய..........&lt;br /&gt;அம்மாவும், அப்பாவும் அன்புடைய சோதரரும்,&lt;br /&gt;அண்டை, அயலோடு, அகம் நிறைத்த நண்பர்களும்&lt;br /&gt;சிந்தைக்குள் மறைந்திருக்கும் சொல்லாத உறவுகளும்,&lt;br /&gt;எத்தனையோ, எத்தனையோ......&lt;br /&gt;வீரர்களின் எண்ணத்தில் விழா எடுக்கத் தொடங்கினர்.&lt;br /&gt;&lt;br /&gt;சேது மட்டும் இந்நிலைக்கு விதி விலக்கா?&lt;br /&gt;அவனுக்கு என்ற உலகம்.....&lt;br /&gt;அன்னை எனும் ஒற்றைச் சொல்லில் அடக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்னையைக் கண்டு...&lt;br /&gt;அவள் மடியில் தலைசாய்க்கும் ஆவல் வளர&lt;br /&gt;சேது எனும் ஆண்மகன் செல்லக் குழவியானான்.&lt;br /&gt;&lt;br /&gt;அம்மா!... அன்புக்குச் சொர்க்கம்.&lt;br /&gt;அம்மா!.... பண்பெல்லாம் அவள் பக்கம்.&lt;br /&gt;அம்மா!..... அகிலத்தை அடக்கும் தாய்மை.&lt;br /&gt;அம்மா!.... வார்த்தைக்குள் அடங்காப் பாசத்தீ&lt;br /&gt;&lt;br /&gt;எண்ணக் கோலங்கள் கொழுந்து விட்டன.&lt;br /&gt;உள்ளத்துள்..... அண்டத்தைக் கடந்து அம்மா கடவுளானாள்.&lt;br /&gt;-----------------&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளி மீன்கள் ஓய்வெடுக்கும் விடிகாலைப் பொழுது&lt;br /&gt;துள்ளியோடி தாய்மடியிடித்து பால் குடிக்கும் கன்று&lt;br /&gt;கண்கள் உள்ளிட்ட கனவுடனே சேது அன்னை விழித்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;உறவுகளின் வரவு கூறும் காக்கைச் சத்தம் கேட்டு&lt;br /&gt;உச்சுக் கொட்டி உச்சிமேலே பல்லிகளின் சிரிப்பு!&lt;br /&gt;&lt;br /&gt;கூச்சமின்றி விரிந்த மலர்கள்- அதன் சுற்றமெல்லாம் மறைக்க&lt;br /&gt;காய்த்த வாழை மரத்தின் குலையில் கனிகள் மஞ்சள் பூச....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நேற்றிருந்த வனப்பை காட்டில் இன்று சோபை துலங்க,&lt;br /&gt;மாற்றமதை உணர்ந்த  பெற்றமனது சிலிர்த்துக் களித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணுக்குள் பொத்திக் காத்த கண்மணி&lt;br /&gt;சேது எனும் பெயர் பூண்ட அன்ரனி!&lt;br /&gt;&lt;br /&gt;கையிடுக்கில் தூக்கி, கதகதப்பாய் அணைத்து,&lt;br /&gt;சின்ன அதரங்களில் - தாய்மை&lt;br /&gt;பூரித்த கிண்ணத்துப் பாலூட்டி இவள் வளர்த்த பிள்ளை!&lt;br /&gt;&lt;br /&gt;உடலில் எண்ணெய் பூசி, உருவி ஊறவிட்டு,&lt;br /&gt;உல்லாசக் களிப்புடனே, உந்தியவன் நீந்தி வர&lt;br /&gt;உளம் களித்து இரசித்தபிள்ளை!&lt;br /&gt;&lt;br /&gt;காசினியில் நடைபயில, காலில் கற்கள் குத்துமென்றே&lt;br /&gt;காரிகை தன் இடையிற்சுமந்து கட்டிக் காத்து வளர்த்தபிள்ளை!&lt;br /&gt;&lt;br /&gt;நோவு, காய்ச்சல் அவனுக்கெனில் நோயுற்று நலிந்ததிவள்&lt;br /&gt;எண்ணங்கள் எங்கெங்கோ சுற்றிச் சுழன்று கொண்டிருக்க.....&lt;br /&gt;&lt;br /&gt;கைக்குள்ளே இருந்த கறுப்பன் தாவலுடன் வாலாட்டி,&lt;br /&gt;உற்சாகக் குரல் கொடுக்க,&lt;br /&gt;வாசற் கதவோரம் வருபவனை உணர்ந்து விட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவன்......&lt;br /&gt;வாஞ்சையோடு ஓடிவர, வாரியணைத்து முத்தமிட்டாள்.&lt;br /&gt;கூசக் கூசக் கண்கள் அகற்றி குலமகனைப் பார்த்த தாயின்&lt;br /&gt;விழிமீன்கள் உடைப்பெடுத்த அருவியிலே நீந்தின.&lt;br /&gt;&lt;br /&gt;'அம்மா" மட்டுமே வாய்மொழி ஆனாள்.&lt;br /&gt;அன்புக்கு உண்டோ அடைக்குந்தாள்?&lt;br /&gt;அன்னைக்கும் பிள்ளைக்கும் இடையென்ன கேள்வி?&lt;br /&gt;அன்னையின் சீராட்டில் 'அன்ரனி"&lt;br /&gt;இவனைப் பிரிந்த இன்னலினை இயம்பின&lt;br /&gt;அவள் இயக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;வாய்மூடும் மௌனம் தாய்மைக்குப் பூட்டிடுமா?&lt;br /&gt;அன்னை உள்ளத்தை அறியாத பிள்ளையா?&lt;br /&gt;தாயிற்கு இவனென்ன புரியாத தனயனா?&lt;br /&gt;வாயும், வயிறும் வேறு வேறானாலும்&lt;br /&gt;வலியும், வேதனையும் ஒன்றுதானே!&lt;br /&gt;&lt;br /&gt;மௌனத்தின் வலிமை மாபெரும் புத்தகம்&lt;br /&gt;வாசிக்க வாசிக்க நீண்டு வளரும்!&lt;br /&gt;&lt;br /&gt;அணைப்பும், விருந்தும் அன்னையின் வருடலும்&lt;br /&gt;இகத்தில் எதுவுமே இதனை மிஞ்சாது.&lt;br /&gt;&lt;br /&gt;தலைமுடி கோதி, தன்மடியில் தலைசாய்த்த&lt;br /&gt;சேய்முகம் பார்த்தாள் அன்னை.&lt;br /&gt;பார்வையில் நிம்மதி பரவசத்தின் சன்னதி&lt;br /&gt;வீரத்தில் வாகை சூடி வெற்றிகளை ஆள்பவன்&lt;br /&gt;தாய்மையெனும் களத்தினுள் சரணடைந்து நின்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;தாய்மை..........&lt;br /&gt;உலகை மேவும் தத்துவம்&lt;br /&gt;இவன் அடங்குதல் இயல்புதானே!&lt;br /&gt;&lt;br /&gt;அன்னையின் கைகளுக்குள் அன்பு வருடலிற்குள்&lt;br /&gt;இன்னவன் இருப்பது இயற்கைக்கு வியர்த்ததா?&lt;br /&gt;சாளர ஓரத்தில் சடுதியில் இவன் நோக்கை&lt;br /&gt;முல்லை கொடி கொண்டு முழுதாக ஈர்த்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மண்நோக்கும் கொடி காண மறவன் உளம் சிலிர்த்தான்&lt;br /&gt;அந்நேரம் மங்கையொருத்தி  மனமறைப்பிலிருந்து வெளித்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்முறுவல் இதழ் தவழ, இவன் இமைகள் மேவின.&lt;br /&gt;கடிவாளம் இன்றி  உள்ளம் காற்றிலேறிப் பறந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;காலடியில் வாலாட்டி கண்ணயர்ந்த கறுப்பன்&lt;br /&gt;தெருவோரச் சரசரப்பில் விறுக்கென்று குரைத்தெழுந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாய் குரைத்த நனவுலகு... கனவதனைக் கலைக்க,&lt;br /&gt;கடமை உயிர்த்து புலிமனதில் கர்ச்சித்து அமர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கண்மூடித் திறப்பதற்குள், முறுவல் உதட்டில் மறைந்தது&lt;br /&gt;அழுத்தம் உறவு கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;விழிமூடி மடியிருந்த மகன் முகத்தில் அழுத்தம்&lt;br /&gt;நொடி தோன்றி மறைந்த எழில் பூத்த முறுவல்&lt;br /&gt;நுண்ணிய மாற்றம்தான்!......&lt;br /&gt;அன்னைக்கு அவனைப் புது அதிசயமாய் காட்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;தன்னை யாரோ உற்றதாய் உணர்ந்தவன்&lt;br /&gt;அன்னையின் நோக்கிலே உண்மையை உணர்ந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;வெட்கித்த மணித்துளியில்,&lt;br /&gt;கரிய முகம் சிவக்க கண்களை மூடினான்.&lt;br /&gt;இன்னவன் சங்கடம் ஈன்றவளுக்குப் புரியாதா?&lt;br /&gt;&lt;br /&gt;அம்மா....&lt;br /&gt;அடுக்களை செல்வதாய் அங்கிருந்து அகன்றாள்.&lt;br /&gt;அன்னைதான் அகன்றாள் நெஞ்சத்துள் புகுந்த&lt;br /&gt;பெண் அஞ்சுகம் அகலவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எண்ணத்தை அடக்கினான் மறுபடி எழுந்தது&lt;br /&gt;அடக்க அடக்க வலிமை பெற்றுச் சிலிர்த்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தச் சுந்தரப் பைங்கிளியை சந்தித்தால் என்ன?&lt;br /&gt;கேள்வி வண்டாகி மனதைக் குடைந்தது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6925413834765719932-25781525256197544?l=venkaiyan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://venkaiyan.blogspot.com/feeds/25781525256197544/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://venkaiyan.blogspot.com/2009/10/6.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6925413834765719932/posts/default/25781525256197544'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6925413834765719932/posts/default/25781525256197544'/><link rel='alternate' type='text/html' href='http://venkaiyan.blogspot.com/2009/10/6.html' title='அங்கம் 6'/><author><name>வேங்கையன் பூங்கொடி (காவியம்)</name><uri>http://www.blogger.com/profile/03445322919374394926</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://1.bp.blogspot.com/-yJU2OVtkJVc/TeJSVjeGpMI/AAAAAAAAABw/BetBpneXF6I/s220/54526902.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6925413834765719932.post-5213928223114571256</id><published>2009-10-25T07:11:00.001-07:00</published><updated>2009-10-25T07:11:25.308-07:00</updated><title type='text'>அங்கம் 7</title><content type='html'>மௌன வலிகள்&lt;br /&gt;&lt;br /&gt;விடுமுறை நாட்கள் விரைந்து மறைந்தன.&lt;br /&gt;வீதியில் வெயிலின் கடுமையும் தணிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;உண்ட களையில் உறங்கி விழிக்கும்&lt;br /&gt;மதியமும் மாலையும் கலந்த மத்திமம்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரிவுப் புயல் மையமிட&lt;br /&gt;மௌனம் வலிகளைச் சுமந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கண்களின் ஓரத்தில் கனிவை மீறி&lt;br /&gt;கண்ணீர் வரவா? என்றது&lt;br /&gt;&lt;br /&gt;தாய்க்கும், சேய்க்கும் இடையினில் பிரிவு&lt;br /&gt;சீனச் சுவராய் எழுந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மோதிரம் தந்தவன் மேதினி நீத்த பின்&lt;br /&gt;சொந்தம் என்பது அவள் சிந்தைக்கிவனே!&lt;br /&gt;அப்பிள்ளையைத் தவிர எவர் உணர்வார்?&lt;br /&gt;&lt;br /&gt;ஊண் ஊட்டினாள்,&lt;br /&gt;உப்பரிகை தேடும் உல்லாசன் அல்லாது&lt;br /&gt;தன் மானத் தேன் ஊட்டி- தமிழ்&lt;br /&gt;மானம் காக்க வளர்த்தாள்.&lt;br /&gt;-------&lt;br /&gt;&lt;br /&gt;ஈருந்தி எடுத்து, இயல்பு நிலை சோதித்து&lt;br /&gt;ஈன்றவள் விடைக்காய் இளையவன் நிமிர்ந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;தாய்மை...            .&lt;br /&gt;நெஞ்சுக்குள் தவிப்பு&lt;br /&gt;நஞ்சணிந்த நெஞ்சம்!&lt;br /&gt;காணக் காண கருவறை கலங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;ஏக்கத்துடன் தாயும்,&lt;br /&gt;நாடு மீட்கும் நோக்கத்துடன் சேயும்!&lt;br /&gt;&lt;br /&gt;இனி..&lt;br /&gt;&lt;br /&gt;ஈன்றவளைக் காண்பது எப்போது?&lt;br /&gt;தாய் அணைத்து முத்தமிட்டாள்.&lt;br /&gt;தனயன் மெல்ல விடை பெற்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஈருருளி மிதியடியை இவன் கால்கள் உந்த&lt;br /&gt;பார் விரித்த பாதை பயணத்திற்கு அழைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சீராட்டி வளர்த்தவள் சிறிதாகிச் சிறிதாகி&lt;br /&gt;ஓர் பொட்டாகி ஒழுங்கை முனையில் மறைந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;காலுந்தக் காலுந்த காற்றைக் கிழித்து&lt;br /&gt;ஈருருளி அவன் கனத்தை ஏற்றுப் பறந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அதனையும் விஞ்சி- அந்த&lt;br /&gt;கார்காலத் தென்றல் முகம்&lt;br /&gt;இளையவனை ஈர்த்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கொள்ளை எழில் கொஞ்சும்&lt;br /&gt;கோதை முகம் காண,&lt;br /&gt;எல்லை இல்லாமல் ஏக்கங்கள் நிறைய,&lt;br /&gt;நலன்புரி நிலையருகே&lt;br /&gt;வந்த நிலை புரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆவல் பொங்கி, அகம் ஆள&lt;br /&gt;தேவதையைத் தெரிகிறதா? எனும்&lt;br /&gt;தேடல் விரிந்து, விழி ஆள&lt;br /&gt;தெரு மறந்து போனது.&lt;br /&gt;---------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;எறிகணைகள் குறிப்பெடுத்து சீரழித்த பாதை&lt;br /&gt;ஆங்காங்கே புண்ணாகிப் புதரானது.&lt;br /&gt;&lt;br /&gt;வில்வண்டி பயணிக்கும்,&lt;br /&gt;வீதியோரப் பயணிகளின் ஈருருளி ஏறி இறங்கி&lt;br /&gt;எளிதாகப் பறக்கும் கரணம் அடிக்கும்.&lt;br /&gt;பள்ளமும், மேடும் பழகிய பாதையில்&lt;br /&gt;உழவு இயந்திரங்கள் உறுமி வெடிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்விடருற்ற சாலையில் ஈருருளி தடுமாறி,&lt;br /&gt;இயல்பிழந்து, மேற்கிளம்பிச் சின்னக் கரணமிட,&lt;br /&gt;தன்னை நிலைப்படுத்த, தரணியில் கால் ஊன்ற,&lt;br /&gt;நெஞ்சத்தில் அணியான நஞ்சுக் குப்பியது&lt;br /&gt;கண்டத்தைச் சுற்றி அவன் கவனத்தை ஆண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;சின்னஞ் சிறுபொழுது மின்னலிட்ட சிந்தனை&lt;br /&gt;அன்னவன் அகம் ஒடுக்க அக்கணமே&lt;br /&gt;அவ்விடம் விட்டு அகன்றுவிட நினைத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஈருரளி, இடருற்று சாய்வேற்ற நிலை&lt;br /&gt;திருத்தி, அதை நிறுத்தி,&lt;br /&gt;நெற்றி வேர்வை ஒற்றி நிமிர்ந்தான்&lt;br /&gt;கல்லாகச் சமைந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;தவிர்த்துவிடத் துணிந்தது,&lt;br /&gt;அகன்று போக நினைத்தது,&lt;br /&gt;இயலாத செயலாக இவன் உறைத்து நின்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;விதி எழுதும் தேவனுக்கு இருகூர் விளையாட்டு!&lt;br /&gt;விடுகதைகள் போட்டாலும் வெளிக்காது அவன் குட்டு!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6925413834765719932-5213928223114571256?l=venkaiyan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://venkaiyan.blogspot.com/feeds/5213928223114571256/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://venkaiyan.blogspot.com/2009/10/7.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6925413834765719932/posts/default/5213928223114571256'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6925413834765719932/posts/default/5213928223114571256'/><link rel='alternate' type='text/html' href='http://venkaiyan.blogspot.com/2009/10/7.html' title='அங்கம் 7'/><author><name>வேங்கையன் பூங்கொடி (காவியம்)</name><uri>http://www.blogger.com/profile/03445322919374394926</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://1.bp.blogspot.com/-yJU2OVtkJVc/TeJSVjeGpMI/AAAAAAAAABw/BetBpneXF6I/s220/54526902.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6925413834765719932.post-789370907037280266</id><published>2009-10-25T07:09:00.001-07:00</published><updated>2009-10-25T07:09:58.513-07:00</updated><title type='text'>அங்கம் 8</title><content type='html'>&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;உரியவன்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உயிரின் தேடல் விசாலமாக&lt;br /&gt;உயரிய இலட்சியம் உளத்தைக் கவரும்.&lt;br /&gt;நாட்கள் தாண்டும். நாளைய பொழுது&lt;br /&gt;நயனம் நிறைக்கும் நாயகன் வருவான்.&lt;br /&gt;தினம் தினம் மனதில் கனமிடும் ஏக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காகித மடல்களில் மூடிய  இரகசிய கனவுகள்&lt;br /&gt;தேக்கு மரப்பெட்டியின் மூலையில் ஒடுங்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;செயல்களில் மாற்றம். சேவையில் புது நாட்டம்.&lt;br /&gt;சிந்தனையில் செழுமை. வதனத்தில் தனி வசீகரம்.&lt;br /&gt;ஆனால்                .&lt;br /&gt;உள்ளம் சிந்தை பறித்தவனின்&lt;br /&gt;சிரித்த முகம் வேண்டும், வேதனை செய்யும்.&lt;br /&gt;அந்த வேங்கை மைந்தனின்&lt;br /&gt;வரவுக்காக   -இந்த&lt;br /&gt;மங்கை மைவிழிகள் கரையும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆவல் பொங்கும். அறிவை மீறும்&lt;br /&gt;குறி பிழைத்திடின் உயிரைக் கசக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;கருகிடும் நாட்கள் காதலை வளர்க்கும்&lt;br /&gt;காரிகை இவளின் கதை இதுதானே!&lt;br /&gt;&lt;br /&gt;பதினை பத்து நாட்கள் ஆனதா?&lt;br /&gt;விதி கனைத்து வினாக் குறி இட்டதா?&lt;br /&gt;&lt;br /&gt;காவியக் குமரியின் கைகளைப் பிடித்து&lt;br /&gt;கரைந்திடும் கணங்கள் கவிதை பாடின.&lt;br /&gt;&lt;br /&gt;எதிரியைப் பொருதும் புலிவீரர் காண்கையில்&lt;br /&gt;நெஞ்சத்தில் மாபெரும் சோதனை. - இவள் கனவு&lt;br /&gt;மஞ்சத்தை ஆளும் அவனைக் காணாமல்&lt;br /&gt;உருகிடும் இதயத்தில் ஆயிரம் வேதனை. &lt;br /&gt;&lt;br /&gt;தெருவில் ஈருந்தி இரதத்தினில் தேவதை&lt;br /&gt;மறுமுனைப் பள்ளத்தில் மானசீக மன்னவன்.&lt;br /&gt;கால்களின் நடுவே உருளியை அழுத்தி&lt;br /&gt;கைப்பிடி இறுக்கும் காரியம் புரிந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;கருகிய பொழுதுகள்  அவள் உயிரிடை இட்ட தீ&lt;br /&gt;&lt;br /&gt;அவனைக் கண்டதும்&lt;br /&gt;புனலிட்ட பூக்களாய் உயிர்த்தன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆவலோடு அவடம் வந்த  ஆரணங்கு செல்வி&lt;br /&gt;தாவலுடன் ஈருந்திதனை விட்டிறங்கி நின்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அரியவன்!                        .&lt;br /&gt;உயிருக்கும் உறவுக்கும் உரியவன்!&lt;br /&gt;&lt;br /&gt;'கண்டேன் செம்மலை" உணர்வுகள் குதித்தன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆவலும் அதை அடக்கும் ஆளுமையும்&lt;br /&gt;சிந்தைக் களத்தில் சண்டைகள் இட்டன.&lt;br /&gt;கை,கால்கள் குளிர்ந்திட,&lt;br /&gt;இரு கன்னங்களும் சூடேறிச் சிவக்கும்&lt;br /&gt;ஒப்பில்லாச் சங்கதி ஒன்றங்கு நிகழ்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் விழிகள் இவளையும்,&lt;br /&gt;இவள் கயல்கள் அவனையும்&lt;br /&gt;ஆளுமையாய் ஈர்த்தன.&lt;br /&gt;புருவங்கள் துடித்துப் புதுக்கதைகள் பேசின&lt;br /&gt;&lt;br /&gt;புறச்சூழல்....                   .&lt;br /&gt;ஒரு கணம் தான் சுதாகரித்து வென்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;'பேசலாமா?"                    .&lt;br /&gt;பிறிதொரு யோசனை&lt;br /&gt;சேதுவின் மனதிலே,&lt;br /&gt;குறுக்கலாய் ஒன்று 'கூடாது" என்றது.&lt;br /&gt;&lt;br /&gt;கடமை காத்திருக்க காதலுக்கு என்ன வேலை?&lt;br /&gt;எண்ணமதை எறிந்ததாய்  இளையபுலி நினைத்தான்;.&lt;br /&gt;&lt;br /&gt;'என்ன பேசலாம்?" செல்வியவள் சிந்தனை.&lt;br /&gt;சிந்திக்க தெரிந்தளவு செயலுக்குத் துணிவில்லை.&lt;br /&gt;வந்தனை செய்யக் கூட முடியாத விந்தை நிலை&lt;br /&gt;இந்தப் பருவப் பாவையிடம் எவர் செய்த மாற்றமிது?&lt;br /&gt;&lt;br /&gt;வினாடிப் பொழுதுகளில்&lt;br /&gt;தன் நிலை தேற்றி முறுவல் பூத்தவன்&lt;br /&gt;அகன்று செல்ல அகங்கள் துடித்தன.&lt;br /&gt;சென்றவன் திக்கை நின்று பார்த்தவள்&lt;br /&gt;நெஞ்சம் அவன் பின்னோட&lt;br /&gt;நலன்புரி சங்கம் ஏகினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நாடகம்&lt;br /&gt;இருவருக்குள்ளா?&lt;br /&gt;இன்னிரு சோடிக் கண்கள் மறுத்தன.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6925413834765719932-789370907037280266?l=venkaiyan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://venkaiyan.blogspot.com/feeds/789370907037280266/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://venkaiyan.blogspot.com/2009/10/8.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6925413834765719932/posts/default/789370907037280266'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6925413834765719932/posts/default/789370907037280266'/><link rel='alternate' type='text/html' href='http://venkaiyan.blogspot.com/2009/10/8.html' title='அங்கம் 8'/><author><name>வேங்கையன் பூங்கொடி (காவியம்)</name><uri>http://www.blogger.com/profile/03445322919374394926</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://1.bp.blogspot.com/-yJU2OVtkJVc/TeJSVjeGpMI/AAAAAAAAABw/BetBpneXF6I/s220/54526902.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6925413834765719932.post-5732303785864354247</id><published>2009-10-25T07:07:00.001-07:00</published><updated>2009-10-25T07:07:38.536-07:00</updated><title type='text'>அங்கம் 9</title><content type='html'>&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;அகரத்து பாடம்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி என்பது நாகரீக மேன்மை&lt;br /&gt;பண்பியல் பகரும் அகரத்துப் பாடம்&lt;br /&gt;உரைப்பவராலும், ஏற்பவராலும்&lt;br /&gt;எடுத்துப் போற்றும் சொல்லின் வடிவம்.&lt;br /&gt;&lt;br /&gt;இலட்சியம் மனதில் உதித்தவர் முதலில்&lt;br /&gt;பண்பியல் பாடமே கற்கின்றார்.&lt;br /&gt;அலட்சியமாக அதனைத் தவிர்த்தவர் பின்னர்&lt;br /&gt;அவதியுற்றே அரற்றுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்றைய பொழுதின் இப்பூவையர் சேவையை&lt;br /&gt;இன்றுலவும் இவனுயிர் மெய் உரைக்க,&lt;br /&gt;நன்றி செப்ப நலன்புரி வந்தவன்&lt;br /&gt;நங்கை ஒருத்தியே நங்கூரம் இட்டிருக்க&lt;br /&gt;அடுத்தவள் வரவிற்காய் அங்கேயே காத்திருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;குழலூதும் இவன் பேச்சு இனியது என்பதால்&lt;br /&gt;குழலிக்கு மணித்துளிகள் மறந்தது உண்மையே.&lt;br /&gt;&lt;br /&gt;வீரமூறும் கதைகள்பல விகடமாகப் பேசியவன்&lt;br /&gt;நாவீச்சு ஒலியிழக்க  நலங்கெட்டு நலியலானான்&lt;br /&gt;ஒலிதொலைத்த இவன் நிலைக்கு விடை தேடப் பூங்குழலி&lt;br /&gt;அவன் நோக்கும் புறநோக்கில் தன் விழியை ஓடவிட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;கண்களில் விழுந்த காட்சி - அதற்கு&lt;br /&gt;இவ்விருவர் மட்டுமே சாட்சி.&lt;br /&gt;குழலி தோழியை அறிந்தவள் தானே!&lt;br /&gt;இனியவன்தான் சற்று விழித்தான்!!&lt;br /&gt;&lt;br /&gt;யுகங்கள் தேவையில்லை இந்த யுவரின் நிலையை அறிய&lt;br /&gt;அவர் அகங்கள் பட்ட பாட்டில்&lt;br /&gt;இருவர் மையல் நிலையும் தெரிய...&lt;br /&gt;புரிந்தவர் புரிந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;குறும்புடன் சிரித்த இருவர் எண்ணமும்&lt;br /&gt;தீர்வினை ஒன்றாய் தொட்டன.&lt;br /&gt;காலங்காலமாய் காவியக் கதைகள்&lt;br /&gt;சொன்னவை பொய்யாய் ஆகுமா?&lt;br /&gt;&lt;br /&gt;ஆடிவரும் தேரழகு அற்புதப் பேரழகு&lt;br /&gt;நிலம் நோக்கி நடை பயின்ற&lt;br /&gt;முகம் சிவந்த தேவதையை&lt;br /&gt;முழுமையாக நோட்டமிட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;கார்முகிலும், திரிபிறையும்&lt;br /&gt;காண்பவரைக் கவரும் காந்தக் கயல்களும்,&lt;br /&gt;கூரான புருவங்களும், நேரான நாசியும்,&lt;br /&gt;செழுமைமிகு கன்னங்களும், செவ்வண்ண உதடுகளும்,&lt;br /&gt;சின்னக் கழுத்தழகும், செவ்வாழை நிறத்தழகும்,&lt;br /&gt;ஏற்ற வயதுக்குற்றபடி எழில் கொஞ்சும் யௌவனத்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;இவளைப் பார்த்தொருகால் கவி படைக்க&lt;br /&gt;கம்பன் இங்கு பிறந்திருந்தால்&lt;br /&gt;காவியங்கள் பன்னூறு காற்றாகப் படைத்திருப்பான்.&lt;br /&gt;&lt;br /&gt;'சேது மட்டும் விதிவிலக்கா?"&lt;br /&gt;தனக்குள் சிரித்தான் இனியவன்.&lt;br /&gt;&lt;br /&gt;அசைந்து வரும் ஆரணங்கை தன்பால் ஈர்ந்திட&lt;br /&gt;தன்னிருப்பைக் காட்டச் செருமினான், இருமினான்.&lt;br /&gt;ஆண் செருமல் கேட்ட அணங்கு அரண்டு நிமிர்ந்தாள்.&lt;br /&gt;அங்கு பேருவகை கொண்ட போரியல் புலி கண்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஈருருளி நிறுத்தி உள் வந்தவளைக் காட்டி&lt;br /&gt;'செல்வி" என்று அவள் சுயம் சொன்னாள் பிரிய சகி.&lt;br /&gt;&lt;br /&gt;ஆரோக்கியம் பற்றி அளவளாவல் தொடர்ந்தது.&lt;br /&gt;சீறி பாய்ந்த செல்துகள்கள்&lt;br /&gt;மெய்யுள்ளே சென்று மேலும் மேலும் சிதறியதால்&lt;br /&gt;நெடுநாள் வைத்தியம் இவனுடல் கேட்டது.&lt;br /&gt;அடிக்கடி வைத்தியம் அவனுக்கு என்பதால்&lt;br /&gt;அவையினை முடித்துத் தேறி வந்ததே இவன் நிலை.&lt;br /&gt;&lt;br /&gt;சொற்களைப் புடம்போட்டு அவன் செப்பிடச் செப்பிட&lt;br /&gt;செந்தமிழ் மங்கையர் சிந்தை கலங்க&lt;br /&gt;செவிப்புலன் ஏற்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;-----------&lt;br /&gt;&lt;br /&gt;------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;இனியவன் விகட கதைகளின் ஊடே&lt;br /&gt;கனிமயில் செல்வியை அளக்க விழைந்தான்.&lt;br /&gt;ஆழியை வெல்லும் ஆழமுடைய&lt;br /&gt;அப்பெண் மனம் முன்னால் தோற்றான்.&lt;br /&gt;அகத்தில் அழுத்தம் முகத்தில் வெகுளி&lt;br /&gt;உள்ளக்குரல் உரத்து உரைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நீண்டநேரம் நினைப்பைத் தாக்க&lt;br /&gt;வீரப்புலிமகன் விடைபெற்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;வனப்புக் கோடி பெற்ற இளமயில் நங்கை&lt;br /&gt;வன்மை கோடி கொண்ட தன்னுயிர்த் தோழன்&lt;br /&gt;இணைத்துப் பார்த்தான் நினைப்பே இனித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;செருக்களப் புலியின் தருக்கடக்கும் கிளியிவள் - என&lt;br /&gt;எண்ணத்தில் பலமான கணக்குப் போட்டான்.&lt;br /&gt;இனிக்கும் நினைவுடன் பாசறை வந்தவன்&lt;br /&gt;சுவர் அரன் சுதாவைச் சுகம் கேட்க மறந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;செல்லும் இடமெங்கும் சேதுவைத் தேடினான்&lt;br /&gt;இன்னவன் ஆவல் இளந்தோழரை ஈர்த்தது.&lt;br /&gt;'உயிர் காத்த கடவுளைப் பூசிக்கப் போகிறான்&lt;br /&gt;வழி காட்டுங்கள்" என&lt;br /&gt;வாய் முட்டும் சிரிப்பொலியும் கேலியும் பிறந்தன.&lt;br /&gt;தோழரின் கேலியைத் தூக்கிப் புறம் வைத்து- போர்த்&lt;br /&gt;தளபாடம் சோதிக்கும் சேதுவிடம் வந்தான்.&lt;br /&gt;'இனியவா" என்று இழுத்தணைத்தான் சேது.&lt;br /&gt;&lt;br /&gt;உலைக்களத்தில் காத்தவன்&lt;br /&gt;எமனோடு போராடி உயிர்ப் பறவை மீட்டவன்&lt;br /&gt;நன்றி சொல்கையில் நாத் தழுதழுக்க&lt;br /&gt;இனியவனின் ஓரவிழிகள் கசிந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;'என்னடா இது? ஏனிந்த ஆர்ப்பாட்டம்?"&lt;br /&gt;என்ற சேதுவை மகிழ்வுடன் பார்த்தான்.&lt;br /&gt;மர்மப் புன்னகை பூத்தான்.&lt;br /&gt;பாசறைப் பந்தங்கள் சுற்றியே சூழ்ந்தனர்.&lt;br /&gt;சுகம் கேட்டனர். அகம் திறந்து தம் அன்பினைக் கொட்டினர்.&lt;br /&gt;&lt;br /&gt;'பற்று வைத்தனரா என்னிடம்?"&lt;br /&gt;இனியவன் கண்கள் பனித்தன.&lt;br /&gt;இறுகும் உறவுகள் தணித்தன.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6925413834765719932-5732303785864354247?l=venkaiyan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://venkaiyan.blogspot.com/feeds/5732303785864354247/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://venkaiyan.blogspot.com/2009/10/9.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6925413834765719932/posts/default/5732303785864354247'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6925413834765719932/posts/default/5732303785864354247'/><link rel='alternate' type='text/html' href='http://venkaiyan.blogspot.com/2009/10/9.html' title='அங்கம் 9'/><author><name>வேங்கையன் பூங்கொடி (காவியம்)</name><uri>http://www.blogger.com/profile/03445322919374394926</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://1.bp.blogspot.com/-yJU2OVtkJVc/TeJSVjeGpMI/AAAAAAAAABw/BetBpneXF6I/s220/54526902.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6925413834765719932.post-7338131775083652101</id><published>2009-10-25T07:02:00.000-07:00</published><updated>2009-10-25T07:03:58.660-07:00</updated><title type='text'>அங்கம் 10</title><content type='html'>&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;காய்க்கும் உறவுகள்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வேவுப் புலிகள் தம் பணி முடிக்கும்&lt;br /&gt;தருணத்தில் ஒளிர்ந்து மிளிர்ந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;எதிரி முகாமின் ஏற்றத் தாழ்வுகள்,&lt;br /&gt;ஒலியலை வழங்கும் தொடர்புக் கோபுரம்,&lt;br /&gt;அழிவை பெருக்கும் ஆயுதக் களஞ்சியம்,&lt;br /&gt;படையினர் உறையும் பதிந்த பகுதிகள்,&lt;br /&gt;&lt;br /&gt;செல்களை ஏவும் பல்குழல் சுழல்கள்,&lt;br /&gt;குண்டுகள் விதைத்த மண்டலிப் பரப்பு,&lt;br /&gt;மின்சாரம் பாயும் கம்பி வேலிகள்,&lt;br /&gt;அசைவை உணர்த்தும் இரவுச் சூரியர்கள்,&lt;br /&gt;&lt;br /&gt;இடிந்து நொறுங்கிய நேற்றைய வீடுகள்,&lt;br /&gt;கற்கள் முட்கள் அடர்ந்த காணிகள்,&lt;br /&gt;நச்சுப் பூச்சிகள் நிறைந்த புதர்கள்,&lt;br /&gt;கட்டுகள் இழந்த சாவுக் கிணறுகள்&lt;br /&gt;என்று பற்பல......&lt;br /&gt;&lt;br /&gt;முன்றல் பரப்பில் எதிரி முகாமின்&lt;br /&gt;மாதிரி ஒன்று வடிவம் கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இனியவன் வரவில் கனிந்த உறவுகள்&lt;br /&gt;இனிவரும் பொழுதினை எண்ணிக் காய்த்தன.&lt;br /&gt;&lt;br /&gt;தலைவனின் ஆணைக்காய் காத்திருந்த சேனையின்&lt;br /&gt;விழிகளில் ஒளிரும் இலட்சிய நெருப்பு&lt;br /&gt;வலிகளை எரிக்கக் கனன்றது. - அங்கு&lt;br /&gt;தளபதியர் வரவிற்காய் காத்திருந்தர் களப்புலிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;இனியவன் சிந்தை இடரினில் தவித்தது.&lt;br /&gt;நிலைமையை அறிந்து நிலையின்றித் துடித்தது.&lt;br /&gt;தோழனின் மனதினை அறிந்திட விழைந்தது.&lt;br /&gt;துணிந்தொரு கேள்விக் கணையினைத் தொடுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;'தெளிந்த சிந்தைக்கு தெரியாத விந்தை என்ன?"&lt;br /&gt;புரியாது சேது விழிகளால் வினவினான்.&lt;br /&gt;&lt;br /&gt;'தெருவோரப் பள்ளம்"&lt;br /&gt;தூக்கிப் போட சேது அதிர்ந்தான்.&lt;br /&gt;பாக்கியில்லாது பதைப்புற்று விழித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;'தெருவோடு நடந்தவையை&lt;br /&gt;அருகிருந்து பார்த்தானா?....... எப்படி?"&lt;br /&gt;&lt;br /&gt;'என்னடா என் கேள்விக்கு&lt;br /&gt;பதில் இன்னும் இல்லை?"&lt;br /&gt;இனியவன் குரல் ஓங்கி ஒலித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சேதுவின் நாவோ செயலற்று உலர்ந்தது.&lt;br /&gt;ஆயிரம் எண்ணங்கள் அகத்திற்குள் அலைந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;'அவளைப் பற்றி அறிந்திருப்பானோ?"&lt;br /&gt;கேள்வி கடலாய் கொந்தளித்து எழுந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;செந்தமிழினியவன் செப்பிய கூற்றினால்&lt;br /&gt;சேதுவின் செயலிலே சாது தடுமாற்றம்.&lt;br /&gt;&lt;br /&gt;நட்புக்குள் அகப்பட்டால் தப்புதல் இலகா?&lt;br /&gt;வழியின்றி - பேசும் வகையின்றித் தவித்தான்.&lt;br /&gt;தகுந்த காரணம் தேடித் தளர்ந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வேளை            .&lt;br /&gt;தப்ப வைக்க வந்ததுபோல் - யாழ்த்&lt;br /&gt;தளபதி வரவு தெரிய,&lt;br /&gt;செப்புக் குண்டுச் சரத்தினை&lt;br /&gt;எண்ணும் விதத்தினால் தன்னை மறைத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;நாளைய இரவு!!!&lt;br /&gt;பகைவர் முகாமின் பாடைக்கு நாட்குறித்தானது.&lt;br /&gt;மாதிரி வடிவின் முன்- தளபதி&lt;br /&gt;நீட்டிய தடியுடன் திட்டங்கள் செப்பினார்.&lt;br /&gt;&lt;br /&gt;குழுக்கள் குழுக்களாய் உழுக்களைப் பிரித்து,&lt;br /&gt;இலக்கு நோக்கி, எளிதாய் நகர்ந்து&lt;br /&gt;முன்னேறித் தகர்க்கும் நெறியினை உரைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;மருத்துவக் குழுவும், ஊர்காவற் படையும்&lt;br /&gt;தயார் நிலையில் இருக்கப் பணித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;கடல் தவிர்த்து முத்திசை வெளிக்கும்&lt;br /&gt;முப்பெரும் தளபதிகள் ஒன்றிலே சேது&lt;br /&gt;என்றது அவர் கூற்று.&lt;br /&gt;&lt;br /&gt;திட்டமிடலில் இரவு கரைந்தது.&lt;br /&gt;வட்டச் சூரியன் கிழக்கு நுதலில்&lt;br /&gt;பொட்டுப் போல் எழுந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;திடலெனத் திரண்ட வயங்களின் மத்தியில்&lt;br /&gt;இனியவன் ஓடித் திரிந்தான்-அவன்&lt;br /&gt;நலத்தினைக் காட்டி, களத்தினை மறுத்த&lt;br /&gt;தோழரை மனதில் சினந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;பூமியைச் சுற்றும் சந்திர கலைபோல்&lt;br /&gt;சேதுவை இனியவன் சுற்றினான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆமை போல அகத்தினை ஒடுக்கி,&lt;br /&gt;சேது இனியவனை (ஏ)மாற்றினான்.&lt;br /&gt;&lt;br /&gt;அழுத்தமுள்ள அகமது அணையுமா?&lt;br /&gt;உயிர்த்து உயிர்த்து உன்னை (ஏ)மாற்றும்.&lt;br /&gt;&lt;br /&gt;இழுத்துப் பூட்டிய இதயம் திறக்கும்&lt;br /&gt;அப்போது  பார்க்கிறேன் நண்பா!&lt;br /&gt;வாய்க்குள் வளர்ந்ததை -மனப்&lt;br /&gt;பாய்க்குள் சுருட்டினான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6925413834765719932-7338131775083652101?l=venkaiyan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://venkaiyan.blogspot.com/feeds/7338131775083652101/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://venkaiyan.blogspot.com/2009/10/10.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6925413834765719932/posts/default/7338131775083652101'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6925413834765719932/posts/default/7338131775083652101'/><link rel='alternate' type='text/html' href='http://venkaiyan.blogspot.com/2009/10/10.html' title='அங்கம் 10'/><author><name>வேங்கையன் பூங்கொடி (காவியம்)</name><uri>http://www.blogger.com/profile/03445322919374394926</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://1.bp.blogspot.com/-yJU2OVtkJVc/TeJSVjeGpMI/AAAAAAAAABw/BetBpneXF6I/s220/54526902.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6925413834765719932.post-7572812314142335496</id><published>2009-10-25T07:00:00.000-07:00</published><updated>2009-10-25T07:01:30.845-07:00</updated><title type='text'>அங்கம் 11</title><content type='html'>&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;வேவு புலிகள்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தாளரவம் கூட உச்சமாய் கேட்கும்&lt;br /&gt;ஆளரவம் தெரியாத அமாவாசை அல்!&lt;br /&gt;வான்வெளி எங்கும் விண்மீன்கள் கண் விழிக்க&lt;br /&gt;காரிருள் போர்த்திக் காசினி அயர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அரச பயங்கரத்தால்&lt;br /&gt;அரைச் சுவராய் ஆகாயம் பார்த்து&lt;br /&gt;உயிர் மூச்சிழந்த உன்னத மனைகள்.&lt;br /&gt;நோக்கும் இடமெல்லாம் கறுப்புப் பேய்களாக&lt;br /&gt;காண்பவரைப் பயமுறுத்தும் சிறுபற்றைக் காடுகள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றுக்குள்,&lt;br /&gt;நாயகர்களாக நச்சரவங்கள்!&lt;br /&gt;இடிந்த சுவற்றுக்குள்ளும், கறையான் புற்றுக்குள்ளும்&lt;br /&gt;குடி கொண்டு ஆங்காங்கே உலவி&lt;br /&gt;அரசாட்சி செய்யும்!&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மன்னவர்கள் ஆட்சியிலே&lt;br /&gt;இரவு நேர மின்மினிகளும்,&lt;br /&gt;நுணல்களும் தகவலின்றிக் கண் மறையும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவைகளைத் தாண்டினால் அப்பொருது களத்தில்&lt;br /&gt;இராட்சதப் பரிதி வட்டங்கள்&lt;br /&gt;குறுகுறுத்து இருள் அழிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்விடத்தில்&lt;br /&gt;பூமகளின் மேனியெங்கும் வெடிப் பூக்கள் காத்திருக்கும்.&lt;br /&gt;ஆளரவம் அறிந்தால் உயிரைக் காவு கொள்ளப் பூக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்தால்.....&lt;br /&gt;&lt;br /&gt;காலனின் காதலி போல் மின்காவு கம்பி வேலிகள்.&lt;br /&gt;இன்னும் முன்னேறின் புலி வருமோ? எனக்&lt;br /&gt;கிலி பிடித்த நிலையினில் எலிகளின் காவலரன்!&lt;br /&gt;&lt;br /&gt;அக்காவலரன் உள்ளிருக்கும்&lt;br /&gt;கனரகச் சுடுகலன்களும், கைக் குண்டுகளும்,&lt;br /&gt;காயத்தைச் சிதறடிக்கும் மோட்டார் எறிகணைகளும்&lt;br /&gt;காற்றின் சலசலப்பைக் கேட்டாலும் உடன் கனலும்.&lt;br /&gt;&lt;br /&gt;வேவு புலிகள் சொல்லச்சொல்ல&lt;br /&gt;வேங்கை மைந்தர் பகிர்ந்து கொண்டர்.&lt;br /&gt;&lt;br /&gt;நேரம் வந்தது&lt;br /&gt;வீரர் அணிகள் சீராய் எழுந்தன&lt;br /&gt;தகவல் புலிகளின் பின்னே நகர்ந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;எதிரிக் களத்தைச் சுற்றி வளைத்து&lt;br /&gt;ஏக காலத்தில் சிதைப்பது திட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;வலிகள் திணிக்கும் காடையர் சுற்றி- பல&lt;br /&gt;வரிவயங்கள் பதுங்கி நகர்ந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஓரளவு தூரம் நெருங்கி ஆனதும்&lt;br /&gt;நேரம் பார்த்துக் காத்திருந்தனர்.&lt;br /&gt;நள்ளிரவு தாண்டும்வரை நகரக் கூடாது&lt;br /&gt;எள்ளளவேனும் எதிரிக்குத் தெரியக்கூடாது!&lt;br /&gt;சேதுவின் கட்டளை செருக்கள வீரரின்&lt;br /&gt;காதுவழியே கனதியாய் நிலைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பற்களில் விசம் வைத்துப் பயமுறுத்தும் நாகங்கள்&lt;br /&gt;நெஞ்சில் நஞ்சணிந்த நாயகர்களைக் கண்டு&lt;br /&gt;நாணிக் கூனி நகர்ந்து ஓடின.&lt;br /&gt;&lt;br /&gt;கறுப்புப் பேய்களாய் காட்சி தரு பற்றைகள்&lt;br /&gt;உரம்பெற்ற உழுக்களின் உரசலில்&lt;br /&gt;சிலிர்த்துச் சிலிர்த்துத் தம்சிந்தைகளைத் தொலைத்தன.&lt;br /&gt;&lt;br /&gt;முட்களின் ஓட்டத்தில் சில மணிகள் கடந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;நள்ளிரவு சற்று நகர்ந்து கொண்டது.&lt;br /&gt;கால்களால் உந்தி, உந்தி நிலமகள் மீதிலே&lt;br /&gt;உழுக்கள் புழுக்களாய் உடலால் ஊர்ந்தனர்.&lt;br /&gt;பாயத் துடித்திருக்கும் புலிவீரர் பின்னிருந்து&lt;br /&gt;படைத் தளபதி சேது&lt;br /&gt;முன்னேறு உத்திகளை முடுக்கிக் கொண்டிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முட்களையும், கற்களையும் முகத்தெதிரே மூச்சுவிடும்&lt;br /&gt;விச யந்துக்களையும் தாண்டி...........&lt;br /&gt;ஒளிக்கலங்கள் விழித்திருக்கும ;ஓரத்தை அண்மித்தர்.&lt;br /&gt;&lt;br /&gt;'ஒளி வீசிகளை செயலிழக்க வை!"&lt;br /&gt;சேதுவிடம் இருந்து ஆணை பிறந்தது.&lt;br /&gt;செருக்கள வீரர் செயலில் இறங்கினர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஓசையில்லாச் சுடுகலன்கள்&lt;br /&gt;சூரிய விளக்குகள் நோக்கி&lt;br /&gt;கூரிய குண்டுகளை உமிழ்ந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்றன் பின் ஒன்றாக, ஈர்பத்து இருள்வலிகள்&lt;br /&gt;இறந்து இருள் வளர்த்தன. தருணம் வாய்த்தது.&lt;br /&gt;தரணி பரவிய மிதிவெடி தாண்டி&lt;br /&gt;எதிரியைக் கதி கலக்குவதே மீதி!....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6925413834765719932-7572812314142335496?l=venkaiyan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://venkaiyan.blogspot.com/feeds/7572812314142335496/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://venkaiyan.blogspot.com/2009/10/11.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6925413834765719932/posts/default/7572812314142335496'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6925413834765719932/posts/default/7572812314142335496'/><link rel='alternate' type='text/html' href='http://venkaiyan.blogspot.com/2009/10/11.html' title='அங்கம் 11'/><author><name>வேங்கையன் பூங்கொடி (காவியம்)</name><uri>http://www.blogger.com/profile/03445322919374394926</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://1.bp.blogspot.com/-yJU2OVtkJVc/TeJSVjeGpMI/AAAAAAAAABw/BetBpneXF6I/s220/54526902.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6925413834765719932.post-7610337482962246416</id><published>2009-10-25T06:59:00.001-07:00</published><updated>2009-10-25T06:59:38.756-07:00</updated><title type='text'>அங்கம் 12</title><content type='html'>&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;நஞ்சணிந்த நாயகர்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சேது மூளை கலங்கி விழித்தான்.&lt;br /&gt;கடைசி நேரக் கள நிலைத் திட்டம்&lt;br /&gt;முத்தளபதியர் பிரிவுகள் மாறின.&lt;br /&gt;முக்கியமான சாதனம் சுமந்த சிலர்&lt;br /&gt;நலிந்த திசைக்கு நகர்த்தப் பட்டதால்&lt;br /&gt;மிதிவெடி தாண்டுமுன் மதி வெடித்து அலைந்தது.&lt;br /&gt;கத்தி முனையில் கால் வைத்தாற்போல்&lt;br /&gt;களத்தில் வீரர் நிலைமை!&lt;br /&gt;&lt;br /&gt;மிதிவெடி தாண்டுதடைக்கு எங்கே போவது?&lt;br /&gt;சிந்திக்கும் வேளை இதுவல்ல என்றே&lt;br /&gt;சிங்கியைக் கடித்தனர் சீரிய இருபுலிகள்!&lt;br /&gt;&lt;br /&gt;பற்களின் இடையே சயனைற் குப்பிகள்&lt;br /&gt;சடசடத்து உடைந்தன- அவை&lt;br /&gt;அப்பாலும், இப்பாலும் அகல முடியாது&lt;br /&gt;இக்கட்டு நிலையிருந்த தோழர்கள் இதயத்தைக்&lt;br /&gt;கசக்கி காயப்படுத்தின.&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணாடித் துகள்கள் காவிய வீரர்களின்&lt;br /&gt;வாய்களில் கீறி தம் கைவரிசை காட்ட&lt;br /&gt;விசமது வேகமாய் அவ்வேங்கையர் மெய்களில்&lt;br /&gt;விரைந்து பரவியது.&lt;br /&gt;&lt;br /&gt;கை, கால்கள் குறண்டின.&lt;br /&gt;கழுத்து நரம்புகள் விம்மிப் புடைத்தன,&lt;br /&gt;சுவாசப்பை விரியாது மூச்சுகள் முனகின.&lt;br /&gt;இருப்பினும்......&lt;br /&gt;தாயகத்திற்காக ஆகுதியாகும் பரவசத்தோடு&lt;br /&gt;தோழர்களைப் பார்த்த&lt;br /&gt;அந்த...... வேங்கையர் விழிகள்&lt;br /&gt;வெற்றியைக் கூறி வெறித்து அடங்கின.&lt;br /&gt;&lt;br /&gt;இடமும், வலமும் இணைந்தே நகர்ந்த&lt;br /&gt;இளைய புலியரின் இதயங்கள் வெடித்தன.&lt;br /&gt;விம்மி ஒரு கணம் வெதும்பித் துவண்டன.&lt;br /&gt;தும்மி முடிக்கும் ஒரு கண வேளைக்குள்&lt;br /&gt;துயரம் இறுக உள்ளங்கள் உறுதி பூண்டன.&lt;br /&gt;-------&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;-------&lt;br /&gt;&lt;br /&gt;[color="#4169E1"]தலைசாயா தகவல்கோபுரம்[/color]&lt;br /&gt;&lt;br /&gt;சூரிய விளக்குகள் சுடர் இழந்திட&lt;br /&gt;எதிரிப் படைகளின் பிடரிகள் கலங்கின.&lt;br /&gt;&lt;br /&gt;துயின்றவரோடு- புலி&lt;br /&gt;வந்தாச்சென அரண்டவர் பாதி!&lt;br /&gt;கையில் கிடைத்த ஆயுத பலத்தால்&lt;br /&gt;தம்மைக் காக்க விழைந்தனர் மீதி!&lt;br /&gt;&lt;br /&gt;தகவல் கோபுரம் தலை சாயாததனால்&lt;br /&gt;அரச படைகள் தகவல் செப்பின.&lt;br /&gt;&lt;br /&gt;பலாலியில் இருந்து கெலிகள் பறந்தன.&lt;br /&gt;வாரணப் படைகளுக்கு வானலை சேதிசெப்ப&lt;br /&gt;உடனடி நடவடிக்கை கடலில் எழுந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;முக்கி, முக்கி குறிகளற்று குண்டுகளைக்&lt;br /&gt;கரைக்குத் துப்பின.&lt;br /&gt;&lt;br /&gt;விடமுண்ட தோழர் உடலங்களை&lt;br /&gt;வெடிப்பூக்கள் பரவிய தரையினில் கிடத்தி&lt;br /&gt;வெடிகளின் ஓசை துரிதமிடத் துரிதமிட&lt;br /&gt;வேற்றுவர் தடத்தை வேங்கைகள் தாண்டினர்.&lt;br /&gt;&lt;br /&gt;திடீரென ஒளிக்கோலம் சூழ மிளிர்ந்தது.&lt;br /&gt;வௌ;வேறு திக்காக சூரியச் சுடர்கள்&lt;br /&gt;கொழுந்து விட்டன!&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த பகலில்&lt;br /&gt;புதிதாய் முளைத்த இரவுச் சூரியன்கள்&lt;br /&gt;வேவு புலிகளை ஏமாற்றிச் சிரித்தன.&lt;br /&gt;தற்காப்பு எடுக்க முடியாத இக்கட்டுநிலை!&lt;br /&gt;'விளக்கை அடியடா!'&lt;br /&gt;எனும் ஆணை எழுமுன்&lt;br /&gt;வீரியத்தோடு சுடுகலன்கள் சுழன்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிசிந்திச் சிரித்தவை ஓய்ந்து செத்தன.&lt;br /&gt;ஒரு மூச்சு விட்டு உடல் நிமிருமுன்&lt;br /&gt;விண்ணிருந்து ஒளி பறந்தது.&lt;br /&gt;உக்கிரம் நிறைந்த உலைக்களமதை&lt;br /&gt;பகலாய் மாற்ற&lt;br /&gt;இயந்திரப்பறவை பிரயத்தனம் செய்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து....&lt;br /&gt;உலங்கு வானூர்திகள் உறுமி உறுமி&lt;br /&gt;குண்டுகளை உமிழ,&lt;br /&gt;புலிகளுக்கு நிலைமை சாதகம் இல்லையென&lt;br /&gt;மூன்று தளபதியரும் முடிவினை எடுத்தர்.&lt;br /&gt;&lt;br /&gt;நிதர்சனம் அறிந்த பெரிய தளபதி&lt;br /&gt;சேதம் தவிர்த்து&lt;br /&gt;உழுக்களின் குழுக்களை வெளிவரப் பணித்தார்.&lt;br /&gt;ஒவ்வொருவராகப் பின்னே நகர்ந்து&lt;br /&gt;தங்களைக் காத்து வெளிவர முனைந்தர்.&lt;br /&gt;உயிர் சேதத்தையும், மெய் காயங்களையும்&lt;br /&gt;தவிர்க்க இயலாது தமக்குள் ஏற்றர்.&lt;br /&gt;&lt;br /&gt;நீரிருந்தும், நிலத்திருந்தும்,&lt;br /&gt;நிர்மல வானிருந்தும்&lt;br /&gt;அரச படைகள் அட்டூழியமிட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;சகாக்கள் திரும்பிய சஞ்சல நிலையால்&lt;br /&gt;சேது தனக்குள் மாய்ந்து மருகினான்.&lt;br /&gt;&lt;br /&gt;சிந்தை, செயல்&lt;br /&gt;சக தோழர்களைக் காக்க- அவன்&lt;br /&gt;தன்னைக் காக்கும் தன்நிலை மறந்தான்.&lt;br /&gt;அந்நேரம், முன்னரன் எதிரியின்&lt;br /&gt;கனரகத் துப்பாக்கி கனலத் தொடங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;குண்டுகள் சிதறின. அதிலொன்று&lt;br /&gt;சேதுவின் கன்னத்தருகிருந்த&lt;br /&gt;நாடிப் பரப்பை நறுக்கென்று துளைத்து&lt;br /&gt;அந்தச் செருக்களப் புலியை செகத்தில் வீழ்த்தியது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6925413834765719932-7610337482962246416?l=venkaiyan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://venkaiyan.blogspot.com/feeds/7610337482962246416/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://venkaiyan.blogspot.com/2009/10/12.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6925413834765719932/posts/default/7610337482962246416'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6925413834765719932/posts/default/7610337482962246416'/><link rel='alternate' type='text/html' href='http://venkaiyan.blogspot.com/2009/10/12.html' title='அங்கம் 12'/><author><name>வேங்கையன் பூங்கொடி (காவியம்)</name><uri>http://www.blogger.com/profile/03445322919374394926</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://1.bp.blogspot.com/-yJU2OVtkJVc/TeJSVjeGpMI/AAAAAAAAABw/BetBpneXF6I/s220/54526902.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6925413834765719932.post-6478012598989784981</id><published>2009-10-25T06:57:00.001-07:00</published><updated>2009-10-25T06:57:51.361-07:00</updated><title type='text'>அங்கம் 13</title><content type='html'>&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;உலுக்கும் அத்தாட்சி&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வண்டமிழ் மண்ணில் குண்டுமழை பொழிந்தது.&lt;br /&gt;வல்லாளர் ஊரின் மேல் எறிகணைகள் அதிர்ந்தன.&lt;br /&gt;வான் தாக்குதல் வலியது, ஆகையால்&lt;br /&gt;புலிகள் நிலமகள் புதருக்குள் ஒதுங்கினர்.&lt;br /&gt;&lt;br /&gt;மக்கள் மனைகள் கற்குவியல் ஆகின.&lt;br /&gt;ஒதுங்கும் உயிர்களைப் பதுங்கும் குழிகள் காத்தன.&lt;br /&gt;&lt;br /&gt;படைத்தவன் இடத்தே மன்றாடிக் கிடந்த&lt;br /&gt;பதுமைகளிடையே பைங்கிளி பதைத்தாள்.&lt;br /&gt;நேற்றைய நாள் நகர... நகர..&lt;br /&gt;விட்டு விட்டு அவள் வலது கயல் துடித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;உறக்கம் வராத இரவுப் பொழுதிலே&lt;br /&gt;நுண்ணிய உணர்வு நலிந்து, நலிந்து&lt;br /&gt;சஞ்சலச் சிலுவையைச் சுமந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஏன்? என்று அறிய முடியாத&lt;br /&gt;அகத்தில் நிலைத்த அந்த வேதனை!&lt;br /&gt; பார்த்துத் தாய் கூட இவள்&lt;br /&gt;தவிப்பை ஏன்? என்று கேட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;தன்நிலை அறியாத தத்தை எதுவென்று சொல்வாள்?&lt;br /&gt;அந்த அதுவே எதுவென்று புரியாத போது!!&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று முன்தினம்&lt;br /&gt;கண் நிறைத்த இவள் கனவு மன்னவன்&lt;br /&gt;ஏற்ற பொறுப்புகள் என்னென்ன என்று- இந்த&lt;br /&gt;எழில்நிலா அறிவாளா?&lt;br /&gt;&lt;br /&gt;நள்ளிரவு தாண்டி நகர,&lt;br /&gt;நடப்புகள் என்னவென்று தெரிந்தது.&lt;br /&gt;நங்கைக்கு தன் மனநாயகன் இருப்பும் புரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இரவிரவாக வெடிகளின் ஓசை&lt;br /&gt;இதயத்தைக் கிழித்துவதைத்தது.&lt;br /&gt;உறவை எண்ணி இருந்தவள் உள்ளம்&lt;br /&gt;உவகை இழந்து தவித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;விடிவெள்ளி முளைக்க விடுதலைப் புலிகளின்&lt;br /&gt;பிக்கப் ஓரிரண்டு வீதி வழியே பீறிட்டோடி&lt;br /&gt;பீதியைக் கிளப்பி மறைந்தது.&lt;br /&gt;ஊரே விழித்து வீதியில் நின்றது.&lt;br /&gt;இவள் என்ன விதிவிலக்கா?&lt;br /&gt;&lt;br /&gt;இருளும், ஒளியும்&lt;br /&gt;இரண்டற கலந்த இளைய காலை&lt;br /&gt;இவளைக் கடந்தது நாற்சில்லு ஊர்தி&lt;br /&gt;வேகமாய் நகர்ந்த வாகனக் கதவின்&lt;br /&gt;ஓரப்பரப்பெங்கும் இரத்தப் பிசுபிசுப்பு!&lt;br /&gt;&lt;br /&gt;கண்கள் கண்ட இக்காட்சி இனி அவள் குலையை&lt;br /&gt;உலுக்கும் அத்தாட்சி ஆகுமென்று அணங்கிவள் அறிவாளா?&lt;br /&gt;&lt;br /&gt;ஊர் திகில் கொண்டு வெளிச்ச ஆடைகட்ட&lt;br /&gt;சூழ்ந்த....&lt;br /&gt;போர் மேகம் கொடையில் கர்ணனை வென்றது.&lt;br /&gt;தொடரும் ... கண்ணின் துடிப்பு&lt;br /&gt;கன்னியின் எண்ணத்தில் கலவரக்கதை எழுத,&lt;br /&gt;கரைந்த பொழுதின்&lt;br /&gt;நடப்பியல் கனத்த இன்னல்கள்  பகிர,&lt;br /&gt;காயம் பட்டவர் யார்யாரென&lt;br /&gt;விதியோ!  கண்ணிகள் வைத்திருக்க,&lt;br /&gt;இந்நிலை விடுவிக்க வருபவர் யாரென..&lt;br /&gt;விலகும் கணங்கள் கேட்டுச் செல்ல.......&lt;br /&gt;&lt;br /&gt;நாளில் பாதி பதுங்கும் குழிக்குள்&lt;br /&gt;சாயங்காலம் சத்தம் குறைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஊர் முழுக்க போர் காயங்கள்!&lt;br /&gt;மனிதர்கள், விலங்குகள், மாளிகை, கோபுரம்&lt;br /&gt;விதிவிலக்கின்றி காயம் பட்ட கணக்கு ஏராளம்.&lt;br /&gt;&lt;br /&gt;புண்பட்டவரும் சந்திவந்து&lt;br /&gt;புதினம் கேட்கும் அன்றாட வாழ்நிலை!&lt;br /&gt;முதல்முறை என்றால் அல்லவா&lt;br /&gt;அரண்டு ஒதுங்குவதற்கு!....&lt;br /&gt;சேதி கொண்டு தோழி வந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;நண்பியைக் கண்டதும் கண்கள் கலங்கின.&lt;br /&gt;சேதியைக் கண்டம் தனக்குள் தடுத்தது.&lt;br /&gt;பாங்கி ஒருத்திக்கு படுகாயம் எனப்&lt;br /&gt;பூரணத்தாய்க்குப் பொய்யை உரைத்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;குழலி முகத்தைக் காணக் காண&lt;br /&gt;பூரணம் பெரிதாய் கவலை கொண்டாள்.&lt;br /&gt;இந்நிலை உற்ற பெண்மகள் தாயை ஓரங்கட்டினாள்.&lt;br /&gt;ஓர்கை இழுத்துச் சூழ்நிலை மாற்றினாள்&lt;br /&gt;அன்னையைத் தவிர்க்க என்னென்னவோ செய்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;புதிதான பெண் நடப்பு புதிராக இருப்பினும்&lt;br /&gt;பெரிதாக எண்ணவில்லை பெற்றெடுத்த பெருந்தகை!&lt;br /&gt;ஆதலால்....&lt;br /&gt;போர் புதினம், ஊர் புதினம் அறிய&lt;br /&gt;தந்தையொடு, தாயும் தலை வாசல் ஏகினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளே...&lt;br /&gt;சாளர வழியாக உள்ளேகி மாருதம்&lt;br /&gt;மங்கையர் மத்தியில் உலவியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆளரவம் அணைந்ததும் சகியை அணைத்தாள் குழலி&lt;br /&gt;விசித்திரமாய் இவள் நோக்க விளக்கமின்றி&lt;br /&gt;பேச்சினிலே தெளிவுமின்றி திக்கித்திணறித்&lt;br /&gt;தவித்தாள் சேதி சொல்லும்தோழி&lt;br /&gt;எதற்கென்று தெரியாது எழிற்செல்வி விழித்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;'என்னவென்று சொல்லேன்டி?'&lt;br /&gt;&lt;br /&gt;'என்னவென்று சொல்வேன்?&lt;br /&gt;ஒப்பில்லா உன் காதலுளம் எப்படித் தாங்குமடி?'&lt;br /&gt;&lt;br /&gt;பாங்கி வாய் முணுமுணுப்பில் பதறினாள் பைங்கிளி&lt;br /&gt;'என்னவர்க்கு.......'&lt;br /&gt;செல்விக்கு சொற்கள் வெளிவர மறுத்தன.&lt;br /&gt;&lt;br /&gt;'காயம் பட்டவர் காலனுக்கு அருகிலாம்!&lt;br /&gt;ஊர் முழுக்க இதுதான் பேச்சு!'&lt;br /&gt;கேட்கக் கேட்க கேவல் எழுந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;காயம் பட்டவர் காலனுக்கு அருகிலா?&lt;br /&gt;எதையும் கேட்கும் புலனதை ஏந்திழை இழந்தாள்.&lt;br /&gt;மெல்ல மெல்ல கண்கள் இருள&lt;br /&gt;மேற்கொண்டு எதனையும் உணராது விறைத்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;சேதியதனைப் பாதி பகருமுன்&lt;br /&gt;மூர்ச்சையாகும் அப்பேதையை&lt;br /&gt;அருகிருந்தவள் அணைத்தாள், தேற்றினாள்.&lt;br /&gt; தலையை வருடித் தைரியம் சொன்னாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அரற்றிப் பிதற்றி அழ முடியாத&lt;br /&gt;அன்புப் பாங்கியின் அகநிலை அறிந்தவள்- மேலும்&lt;br /&gt;அத்தையலை நோக்கும் தைரியம் இழந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;காதோரம் மெல்ல&lt;br /&gt;'கலங்காதே செல்வி கடவுள் இருக்கிறார்."&lt;br /&gt;என்றே கூறி பிரியசகியைப் பிரிய மனமின்றி&lt;br /&gt;மெல்ல அசைந்து மௌனமாக அகன்றாள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6925413834765719932-6478012598989784981?l=venkaiyan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://venkaiyan.blogspot.com/feeds/6478012598989784981/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://venkaiyan.blogspot.com/2009/10/13.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6925413834765719932/posts/default/6478012598989784981'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6925413834765719932/posts/default/6478012598989784981'/><link rel='alternate' type='text/html' href='http://venkaiyan.blogspot.com/2009/10/13.html' title='அங்கம் 13'/><author><name>வேங்கையன் பூங்கொடி (காவியம்)</name><uri>http://www.blogger.com/profile/03445322919374394926</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://1.bp.blogspot.com/-yJU2OVtkJVc/TeJSVjeGpMI/AAAAAAAAABw/BetBpneXF6I/s220/54526902.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6925413834765719932.post-7642592744723143356</id><published>2009-10-25T06:55:00.000-07:00</published><updated>2009-10-25T06:56:23.508-07:00</updated><title type='text'>அங்கம் 14</title><content type='html'>&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;கள்ளம் புகுந்தது&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இரவு படர்ந்தது&lt;br /&gt;அவரவர் உறவுகள் தேடியும் கூடியும்&lt;br /&gt;ஊரதன் காரியம் நடந்தது.&lt;br /&gt;கந்தக நெடியின் மையப் பகுதிக்குள்&lt;br /&gt;வாழ்வியல்..... இன்னும் தொடர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அறையினில் முடங்கி வெளிவரா மகளினை&lt;br /&gt;அழைத்து பூரணம் நெருங்கினாள்&lt;br /&gt;அருகினில் அம்மா காலடி கேட்டு&lt;br /&gt;பெண்மகள் கண்களைத் துடைத்தாள்,&lt;br /&gt;பஞ்சணைக்குள் முகம் புதைத்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;தலையை வருடிய தாயவள் சேயிடம்&lt;br /&gt;நலமா? என்றே கேட்க&lt;br /&gt;கண்மணி அவளும் தலையைப் பிடித்து&lt;br /&gt;வலிக்குதென்று இயம்பினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்றைய இரவின் தூக்கக் கெடுதியும்,&lt;br /&gt;வெடிகள் வீசிய கந்தக நெடியும்,&lt;br /&gt;நீண்ட நேர பங்கர் இருப்பும்&lt;br /&gt;தலைவலி கொடுக்கும் அறிந்தது தானே!&lt;br /&gt;&lt;br /&gt;'தூங்கி எழுந்தால் தெளியும்" என்றே&lt;br /&gt;பூரணம் தேநீர் தந்து தைலமிட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரிவின் பிடியில் உறவுகள்&lt;br /&gt;இரவிற்கிதுதான் பிடித்ததா?&lt;br /&gt;ஊடல் கூடல் அறியாவிடினும்&lt;br /&gt;உயிரின் தேடல் வதைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கண்கள் இரண்டும் இணைந்து நனைந்து&lt;br /&gt;செம்மை ஏறிச் சிவந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;இமைகள் பொங்கி வழிந்து நலிந்து&lt;br /&gt;விழிகளை மேவிட விழைந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;நாசி நீர்மை கோர்த்து நிறைத்து&lt;br /&gt;இவள் இன்னல் நிலையைச் செப்பியது.&lt;br /&gt;&lt;br /&gt;அழகுப் பூமுகம் உலர்ந்து தளர்ந்து&lt;br /&gt;துளிர்ப்பை எங்கோ தொலைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணெடுத்து ஒருகால்- அவன்&lt;br /&gt;திருமுகத்தைக் கண்டால் போதும்&lt;br /&gt;இப் பெண்மனம் இன்னல் விட்டிங்கு ஆறும்.&lt;br /&gt;&lt;br /&gt;உரிமையோடு காண உறவென்று இல்லை&lt;br /&gt;நலம் கேட்க என்றால் நண்பனும் அல்ல,&lt;br /&gt;பாழும் மனம் கிடந்து பைத்தியமாய் அலைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;'நாளை சென்றவரைக் காணாது போயின்&lt;br /&gt;நஞ்சேனும் உண்டென்னை மாய்ப்பேன்"&lt;br /&gt;உள்ளுக்குள் எண்ணங்கள் பொல்லாச் சிறகெடுக்க&lt;br /&gt;இரவு நீண்டது நீண்டது நீண்டேயிருந்தது.&lt;br /&gt;இவளின் எண்ணமும்&lt;br /&gt;ஓங்கி ஓங்கி ஓங்கி வளர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கங்குல் கரைந்தது.&lt;br /&gt;பனிப்புகை அகலாக் கிழக்கு வெளிப்பு&lt;br /&gt;பற்கள் துலக்கப் பொடியும், துவைத்த உடையும்,&lt;br /&gt;கிணற்றடி உறவும் விடயம் உறுத்த&lt;br /&gt;பூரணம்.....வியந்த கண்களால் மகளை அளந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;இழுத்துப் போர்த்தி இதமாய் உறங்கும்&lt;br /&gt;பிடித்த காலைப் பொழுது- அதை&lt;br /&gt;விடுத்து எழுந்து விரையும் குளியல்&lt;br /&gt;வியப்பைத் தானே வழங்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்றைய பொழுதின் தலைவலி!&lt;br /&gt;நேரத்தோடு தூக்கம்!&lt;br /&gt;புலருமுன் விழித்த நிலைக்கு&lt;br /&gt;புதிய காரணங்கள் கூறின.&lt;br /&gt;&lt;br /&gt;காதல் என்றொரு காவியம் நுழைந்திட&lt;br /&gt;கன்னி மனதில் கள்ளம் புகுந்தது.&lt;br /&gt;பூமகள் போன்ற பெண் மனம் இங்கே&lt;br /&gt;பொய்மையை ஏற்று மணந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சோதனை, வேதனை வென்று&lt;br /&gt;மாசாதனை படைக்கும் மனதிடம் எழுந்தது.&lt;br /&gt;போதனை இன்றியே புதியபாடம்&lt;br /&gt;பூரணமாக இவளை ஆண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;உற்றவனைப் பார்க்க உயிர் தவித்தது.&lt;br /&gt;உறையுள் விட்டுச் செல்வது எப்படி?&lt;br /&gt;கற்ற வித்தையைக் கை கொடுக்கும்&lt;br /&gt;காரணமாகக் காட்ட விழைந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;'ஊர்முழுக்க சீரழிந்ததால்&lt;br /&gt;தொண்டர் சேவைக்கு ஆட்கள் வேண்டுமாம்."&lt;br /&gt;&lt;br /&gt;ஈன்றவள் தன் குரல் கேட்கின்றாளா?&lt;br /&gt;கூர்ந்து பார்த்தாள் பைந்தமிழ்ப் பாவை.&lt;br /&gt;அன்னை விழியில் ஆயிரம் கேள்விகள்.&lt;br /&gt;போரதன் இயல்பு மாறிடா வேளை.....&lt;br /&gt;மகளை அனுப்ப மனம் ஒப்பவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அடிமேல் அடித்தால் அம்மி நகராதா?&lt;br /&gt;பொய் மேற் பொய்யும் கற்பனைக் கதையுமாய்&lt;br /&gt;பள்ளித் தோழியைப் பரிதாபம் ஆக்கினாள்&lt;br /&gt;கள்ளம் புகுந்த அருமைப் புதல்வி.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புதானே அன்னை என்பது&lt;br /&gt;அவள் உயிரைப்படைக்கும் உலகமல்லவா!&lt;br /&gt;மனம் கசிந்தது.&lt;br /&gt;மகளுக்கு செல்ல அனுமதி மிகுந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;'யாருடன் செல்வாய்?" என்றொரு வினா&lt;br /&gt;அன்னை வாயிடை பகர&lt;br /&gt;சொல்லக் காத்திருந்தவள் போல்&lt;br /&gt;'குழலியோடு" என்று குரல் கொடுத்தாள்&lt;br /&gt;அவசரம் நிறைந்த அவ்வெழில்க் குமரி.&lt;br /&gt;&lt;br /&gt;அரைகுரையான அம்மாவின் தலையாட்டல்&lt;br /&gt;அவளை வரையரை கடந்த வான்மயிலாய் ஆக்கியது.&lt;br /&gt;அடுத்த கணம் அம்மா மறைந்தாள்&lt;br /&gt;வீதியில் ஈருருளி விசைப்படகு ஆனது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6925413834765719932-7642592744723143356?l=venkaiyan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://venkaiyan.blogspot.com/feeds/7642592744723143356/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://venkaiyan.blogspot.com/2009/10/14.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6925413834765719932/posts/default/7642592744723143356'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6925413834765719932/posts/default/7642592744723143356'/><link rel='alternate' type='text/html' href='http://venkaiyan.blogspot.com/2009/10/14.html' title='அங்கம் 14'/><author><name>வேங்கையன் பூங்கொடி (காவியம்)</name><uri>http://www.blogger.com/profile/03445322919374394926</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://1.bp.blogspot.com/-yJU2OVtkJVc/TeJSVjeGpMI/AAAAAAAAABw/BetBpneXF6I/s220/54526902.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6925413834765719932.post-6915522577022928577</id><published>2009-10-25T06:54:00.001-07:00</published><updated>2009-10-25T06:54:57.399-07:00</updated><title type='text'>அங்கம் 15</title><content type='html'>&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;மறவன் உயிர்ப்பூ&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குழலிக்கு ஒரு கணம் குவலயம் சுழன்றது.&lt;br /&gt;திகைப்பு எல்லை கடந்தெங்கோ சென்றது.&lt;br /&gt;தோழியின் துணிவு துவட்டிப் போட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;'உறவில்லா உறவுக்கு உறவுமுறை உண்டா?"&lt;br /&gt;உச்சந்தலையில் கேள்வி நச்சென்று குட்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;துயர் சுமந்த தோழி நிலையுணரும் நிலை இல்லை.&lt;br /&gt;உள்ளதினை உள்ளபடி உணர்ந்திருந்தாள் பூங்குழலி.&lt;br /&gt;இருந்தும்.. 'வா" என்று அழைத்தவளுக்கு&lt;br /&gt;மறுக்கும் வைரநெஞ்சம் இருக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சாக்குப் போக்குச் சொல்லி&lt;br /&gt;சகி மனதைத் தேற்றிடலாம் என்ற இவள்&lt;br /&gt;நோக்குப் பலிக்கவில்லை&lt;br /&gt;&lt;br /&gt;ஊர் இணைந்த காவற்படை ஊரைக் காக்கும் படை&lt;br /&gt;வீட்டுக் கொருவர் இணைந்த புலிகளின் துணைப்படை&lt;br /&gt;&lt;br /&gt;சக்கை அடைப்பதிலிருந்து சண்டைகட்கு உரித்தான&lt;br /&gt;சில்லறைத் தேவைகளை தம்தரப்பால் வழங்கும்&lt;br /&gt;தற்காப்புப் படை இவர்கள்&lt;br /&gt;இவர்களை மீறி எவ்விடயமும் இல்லை&lt;br /&gt;இவர்கள் போராளிகள் எனத் தடயமும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அத்தகைய ஒருவர்தான் அண்டை வீட்டு அன்பரசு&lt;br /&gt;எத்தகைய விடயமும் அவருள்ள அடக்கம்.&lt;br /&gt;அவரை அண்டி குழலி அறிந்தாள்.&lt;br /&gt;புலிகளின் மருத்துவப்பாசறை இருக்குமிடம் தெரிந்தாள்.&lt;br /&gt;மங்கையர் இருவரும் இளையபுலிவீரன்&lt;br /&gt;நலம் காணப் புறப்பட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஈருருளி உந்த இடையிடையே தடுமாறி&lt;br /&gt;புலிகள்..... வாகன அணி பார்த்து&lt;br /&gt;மனதிடையே படபடத்து,&lt;br /&gt;அறிவொன்று, செயலொன்றாய்&lt;br /&gt;அந்தரித்து அலமலக்கும் சிநேகியிட்டு...&lt;br /&gt;குழலி சிந்தையிலே நொந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;மருத்துவப் பாசறையின் வாசலோரம்&lt;br /&gt;பைங்கிளிகள் வந்த பின்னும்&lt;br /&gt;பேச ஒரு வார்த்தையில்லை&lt;br /&gt;&lt;br /&gt;வாசலிலே நின்ற உழு&lt;br /&gt;வினாக்கள் கொண்டு விழி நிறைத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;விடை அறிந்த பிற்பாடு வீரர்களைப் பார்க்க&lt;br /&gt;அனுமதிகள் கிடையாதென&lt;br /&gt;விதந்து உரைத்த விதத்தில் உயர்ந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;கட்டளைகள் விஞ்சியதால் கெஞ்சுவதில் பயனில்லை&lt;br /&gt;செய்வதேதும் அறியாது குழலியவள் தயங்க&lt;br /&gt;குமுதவிழிக் குளம் நிரம்ப, உதடு அழுத்தி&lt;br /&gt;வரும் விம்மல் அடக்கி வனக்கிளி நிலைத்தாள்.&lt;br /&gt;-----------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;பாசறைக்குள் ஆட்சி செய்யும் பண்ணையார் போல் ஒருவன்&lt;br /&gt;காயமுற்ற வேங்கையரின் கவலைகளைப் போக்கினான்.&lt;br /&gt;பேசிப் பேசி அவரிடத்தே புன்னகைப் பூ எடுக்க&lt;br /&gt;பெரும்பாடு பட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஓர்மமது நிறைந்ததனால்&lt;br /&gt;வேதனை ஓலங்கள் கேட்கவில்லை.&lt;br /&gt;வாதை மிகுந்திடினும்&lt;br /&gt;வன்மையுற்ற மனங்களுக்கு வலிகள் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வெற்றிச் சேதியது எட்டித்துப் போனதனால்&lt;br /&gt;தோல்விக் கசையடிகள் தோற்றமிட்டு வலித்தன.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வலிகளுக்கே.. .&lt;br /&gt;இவன் பேச்சு மருந்திட்டு ஆற்றினான், அமர்த்தினான்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்நேரம், வாசலரன் வேவுபுலி&lt;br /&gt;வெளியே யாருடனோ பேசக் கேட்டவன்&lt;br /&gt;எட்டி ஒரு கால்வைத்து எம்பி மண்மூட்டை மீதேற&lt;br /&gt;மதிலரன் வெளிப்பக்கம் இருமங்கையரைக் கண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;சந்திக்கச் சந்தர்ப்பம்..&lt;br /&gt;இங்கிப்படி அமையுமென்று சிந்தித்தே பார்க்கவில்லை!&lt;br /&gt;&lt;br /&gt;அனுமனைக் கண்ட சீதையென&lt;br /&gt;செல்வி செழித்துத் துளிர்த்தாள்.&lt;br /&gt;குழலி கேட்க விழையுமுன்பே&lt;br /&gt;இனியவன் கதவு திறந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;வாசலில் நின்ற புலியவன் வியக்க,&lt;br /&gt;வாச முல்லைகள் திகைத்து மலைக்க,&lt;br /&gt;தயக்கமின்றியே தாரகை அழைத்து&lt;br /&gt;தனிவழி காட்டியே நடந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;உளவலி நிறைய தளபதி சேது&lt;br /&gt;தன்நிலை மயங்கக் கிடந்தான் - அவன்&lt;br /&gt;தலை முதல் கால்வரை சிலகளக் காயங்கள்&lt;br /&gt;கதைகள் சொல்லிக் கசிந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;உறக்கம் பாதி, மயக்கம் பாதி&lt;br /&gt;இடையிடை விழிப்பு இயல்பில் இடறி&lt;br /&gt;மண்டலி ஈர்ப்பில் மறவன் உயிர்ப்பூ!&lt;br /&gt;&lt;br /&gt;கண்டதும் நடுங்கி, தோழியில் ஒடுங்கி,- உள்ளம்&lt;br /&gt;கொண்டவன் அருகே சென்றது தாமதம்&lt;br /&gt;உதட்டு விளிம்பில் விம்மல் வெடித்தது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6925413834765719932-6915522577022928577?l=venkaiyan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://venkaiyan.blogspot.com/feeds/6915522577022928577/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://venkaiyan.blogspot.com/2009/10/15.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6925413834765719932/posts/default/6915522577022928577'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6925413834765719932/posts/default/6915522577022928577'/><link rel='alternate' type='text/html' href='http://venkaiyan.blogspot.com/2009/10/15.html' title='அங்கம் 15'/><author><name>வேங்கையன் பூங்கொடி (காவியம்)</name><uri>http://www.blogger.com/profile/03445322919374394926</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://1.bp.blogspot.com/-yJU2OVtkJVc/TeJSVjeGpMI/AAAAAAAAABw/BetBpneXF6I/s220/54526902.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6925413834765719932.post-5272263014348328558</id><published>2009-10-25T06:52:00.000-07:00</published><updated>2009-10-25T06:53:20.919-07:00</updated><title type='text'>அங்கம் 16</title><content type='html'>&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;உறுமல் புலிக்கு அழகு&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாடிப் பகுதியில்&lt;br /&gt;துளைத்த குண்டு - உயிர்&lt;br /&gt;நாடியை நாடி நிலைத்தது.&lt;br /&gt;தேடித் தோண்டில் ஆவி பறக்கும்.&lt;br /&gt;மருத்துவர் மரத்து மறுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;குண்டோடு இணைத்து கொண்டொரு பத்து&lt;br /&gt;காயம் ஆற்ற இட்டு,&lt;br /&gt;வலியைக் குறைக்கும் வலிமையைப் பெருக்கும்&lt;br /&gt;பதநீர் உடலில் ஏற்றினார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஊசி முனையில் இறங்கும் திரவம்&lt;br /&gt;உயிரைப் பிடித்து நிறுத்த,&lt;br /&gt;நாசி வழியே மூச்சுக் காற்று&lt;br /&gt;நலிவை வென்று நிலைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;காயக் களைப்பு கண்களை மேவ&lt;br /&gt;இமைகள் கவிந்த வேளை,&lt;br /&gt;விம்மி வெடித்த சின்ன விசும்பல்&lt;br /&gt;விழிக்கச் சொல்லித் தொழுதது.&lt;br /&gt;&lt;br /&gt;கண்கள் காண்பது மெய்யா? - இல்லை&lt;br /&gt;மனக் கண்ணில் ஒளிரும் பொய்யா?&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளத்தை அள்ளி எடுத்தவள், -அவன்&lt;br /&gt;உயிர்ப்பூமாலை தொடுத்தவள்,&lt;br /&gt;எண்ணக் கருவில் நிலைத்தவள்,&lt;br /&gt;கண்களில் கனிவைத் தேக்கினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;உற்றது தாமதம்&lt;br /&gt;சட்டென சேது எழுந்திட, - அவன்&lt;br /&gt;சரீரம் சரிந்து தோற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;களத்தில் காயம் பலருக்கு - அவரைக்&lt;br /&gt;கண்டிடவே என் உளவிருப்பு.- அங்கு&lt;br /&gt;பிரியசகியைப் பிரிய சகி&lt;br /&gt;செப்பிய காரணம் செம்மையுறும்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கிதம் அறிந்த நண்பர்கள்&lt;br /&gt;இணைந்தே அவ்விடம் விட்டகன்றர்.&lt;br /&gt;அங்கொரு தனிமையின் உற்பத்தி&lt;br /&gt;அந்தக் கணங்களை ஆண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இவளினை இங்கு காண்பதற்கு - இவன்&lt;br /&gt;இதயம் கனவுகள் கண்டதில்லை&lt;br /&gt;இதுவரை பேசிப் பழகவில்லை&lt;br /&gt;இருப்பினும் எங்ஙனம் இவள் வந்தாள்?&lt;br /&gt;&lt;br /&gt;சிந்தனைப் புள்ளிகள் கோலமிட&lt;br /&gt;கேள்விகள் எழுந்து குதித்தன.&lt;br /&gt;&lt;br /&gt;மூடிக் கட்டிய முகத்திடையே&lt;br /&gt;வேதனைச் சுருக்கம் ரேகையிட&lt;br /&gt;சின்ன விழிகள் இமைக்காத&lt;br /&gt;செல்விப் பெண்ணவள் துடித்தெழுந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;கண்மணி இரண்டும் பரபரக்க - அவன்&lt;br /&gt;கரத்தினைப் பற்றி வலி அணைத்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;துணிவு பிறந்தது எவ்விதமோ?&lt;br /&gt;துயரே திகைக்க விழி விரித்தான்.&lt;br /&gt;உயிரியல் பாடத்தில் புதுப்பக்கம் - இவன்&lt;br /&gt;இதயத்தின் மத்தியில் எழுதியது.&lt;br /&gt;உள்ளத்தில் களிப்பு கொண்டாலும்&lt;br /&gt;உறுமல் புலிக்கு அழகல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;சினத்தை முகத்தில் பூசிக் கொண்டான்.&lt;br /&gt;செல்வியை அந்நியம் ஆக்கிக் கொண்டான்.&lt;br /&gt;வெறுப்பை விழிகளில் தேக்கிக் கொண்டான்.&lt;br /&gt;விரும்பாப் பார்வையை வீசி வைத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;பார்வையை உணர்ந்தவள் பதறி விட்டாள்.&lt;br /&gt;பண்பினை நினைத்தவள் கரத்தை விட்டாள்.&lt;br /&gt;வேங்கையின் விழியால் வெந்து விட்டாள்.&lt;br /&gt;வேதனைச் சுவட்டால் நொந்து விட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்பே இல்லா அவன் இயல்பா?&lt;br /&gt;அவனை வரித்தது இவள் பிழையா?&lt;br /&gt;ஆயிரம் ஊசிகள் அகம் ஏற&lt;br /&gt;ஏந்திழை இதயக் காயம் பட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;களத்தில் ஏற்பட்ட பின்னடைவு&lt;br /&gt;களப்புலி இவனை மாய்த்திடினும்&lt;br /&gt;உளத்தில் ஏற்பட்ட மென்னடைவு - அவன்&lt;br /&gt;உணர்வை மெலிதாய் மேய்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பார்வையில் அந்நியப்படுத்தியவன்&lt;br /&gt;எண்ணக் கோர்வையில்&lt;br /&gt;உறவைப் பகிர்ந்திருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏந்திழைக் கெதுவும் புரியவில்லை - அவள்&lt;br /&gt;எழில் முகம் சூம்பிக் கருகியது.&lt;br /&gt;&lt;br /&gt;இருமனம் கூடி நேசித்தால்&lt;br /&gt;இதயத்தில் வலிகள் தோன்றாது - இதில்&lt;br /&gt;ஒரு மனம் மட்டும் யாசித்தால்&lt;br /&gt;துயரம் வாழ்வை வாசிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;பேசிப் பார்த்தால் என்ன நிலை?&lt;br /&gt;பேதை நெஞ்சம் ஏங்கியது.&lt;br /&gt;கூசிக் குறுகி உணர்வெல்லாம்&lt;br /&gt;கோழைத்தனமாய் ஒடுங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;வாயைத் திறக்க முடியாத&lt;br /&gt;வரிப்புலி பதில்தான் பகர்வானா?&lt;br /&gt;தூய மனதின் மையல் இதை&lt;br /&gt;மாயத் தோற்றம் என்பானா?&lt;br /&gt;&lt;br /&gt;மூளைக்குள்ளே கூச்சலிட்டு&lt;br /&gt;காலக்கிழவி கடந்து சென்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;மௌனத் தேவதை கோலோச்ச&lt;br /&gt;மாருதப் புரவி பேசியது.&lt;br /&gt;விதிக்கு இந்த மோனநிலை.....&lt;br /&gt;வாடிக்கையா? வேடிக்கையா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6925413834765719932-5272263014348328558?l=venkaiyan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://venkaiyan.blogspot.com/feeds/5272263014348328558/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://venkaiyan.blogspot.com/2009/10/16.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6925413834765719932/posts/default/5272263014348328558'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6925413834765719932/posts/default/5272263014348328558'/><link rel='alternate' type='text/html' href='http://venkaiyan.blogspot.com/2009/10/16.html' title='அங்கம் 16'/><author><name>வேங்கையன் பூங்கொடி (காவியம்)</name><uri>http://www.blogger.com/profile/03445322919374394926</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://1.bp.blogspot.com/-yJU2OVtkJVc/TeJSVjeGpMI/AAAAAAAAABw/BetBpneXF6I/s220/54526902.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6925413834765719932.post-4696988630903340450</id><published>2009-10-25T06:51:00.001-07:00</published><updated>2009-10-25T06:51:38.008-07:00</updated><title type='text'>அங்கம் 17</title><content type='html'>&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பேசத் தெரியாத பிள்ளை&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஈன்றவள் அணைப்பும், இட்ட முத்தமும்&lt;br /&gt;ஈந்த விடையாய் ஏற்று நகர்ந்தான் தீரப்புலி&lt;br /&gt;அவன் கால்கள் உந்திட,&lt;br /&gt;ஈருந்திப் புரவி மெல்ல மெல்ல&lt;br /&gt;வேகம் எடுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;உறுதி நிறைந்த உன்னத தேகம்&lt;br /&gt;தெரு முனையில் குறுகி மறைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தாயின் ஈரவிழிகள் உலர்ந்தன.&lt;br /&gt;இதயம் சிலுவை சுமந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தாவி ஓடி அண்ணன் காலொடு&lt;br /&gt;கறுப்பன் போட்டி இட்டது.&lt;br /&gt;'ஆவி துடிக்கும் அன்னை தனியே'&lt;br /&gt;என்றே உணர்ந்ததும் நின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;தாய் மண்ணைக் காக்க&lt;br /&gt;அண்ணன் போக - அவன்&lt;br /&gt;கண்ணைக் காக்கக் கறுப்பன் வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தாயின் காலடி உரசும் சேய் போல்&lt;br /&gt;ஒட்டி அருகே அமர்ந்தது.&lt;br /&gt;மேரியின் வேதனை உணர்ந்து, - அதனில்&lt;br /&gt;வாரித் தன்னை இணைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இதனை உற்றவள் தன்நிலை தெளிந்தாள்.&lt;br /&gt;கறுப்பன் தலையை மெல்ல வருடினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;உடனே....&lt;br /&gt;கள்ளம் இல்லா வெள்ளைப் பிள்ளை&lt;br /&gt;உச்சியிலிருந்து உருகி வழிந்தது.&lt;br /&gt;தத்துப் பிள்ளையாய் தாவித் தாவி&lt;br /&gt;தன் அன்பினை வள்ளலாய் சொரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தாயைக் காத்தல் தன்பணியென - அது&lt;br /&gt;தன்னுள் நினைத்தது. - தொடரும்...&lt;br /&gt;காவல் பணியில் நாயகனாகத்&lt;br /&gt;தன்னை நிறைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மகவைப் பிரிந்த மாதா துயரம்&lt;br /&gt;மாபெரும் கடலாய் ஆனது.&lt;br /&gt;பிரிவுப் படலம் தொடர்கதை எழுதி&lt;br /&gt;உறவு கொண்டாடிச் சிரித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தனயன் முகத்தில் தோன்றிய உணர்வு,&lt;br /&gt;கரிய முகத்தின் அரிய சிவப்பு...&lt;br /&gt;கடந்த நாட்களின் கலங்கரை போல&lt;br /&gt;அன்னை அகத்தில் நிலைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நினைவுச் சுழிகள் திரும்பத் திரும்ப&lt;br /&gt;ஓரிடத்தில் வலயமிட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;பிள்ளை எண்ணம் பொழுதைக் கரைத்தது&lt;br /&gt;இரவு தொடரும் ஆட்சியில் நிலைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டினுள்ளே படுத்திருந்த&lt;br /&gt;கறுப்பன் எழுந்து கதவை பிராண்ட,&lt;br /&gt;வினயத்தோடு பல்லிகள் கொழிக்க,&lt;br /&gt;வீட்டு முகட்டில் கோட்டான் அலறல்.&lt;br /&gt;மனதிடை ஏதோ மருகி எழுந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கலவரத்தோடு மேரி எழுந்து கதவின் தாளைத்திறக்க&lt;br /&gt;தோட்டக் கிணற்றின் மூலையோரம்&lt;br /&gt;ஓட்டமெடுத்த வீட்டுக் கறுப்பன்&lt;br /&gt;நாட்டு நாய்கள் ஊளை கேட்டு&lt;br /&gt;கூட்டுச் சேர்ந்து மெட்டுப் போட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அச்சம் என்பது ஆளரவமின்றி&lt;br /&gt;மெல்ல மெல்ல மனக்கூட்டில் புகுந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கோட்டான் அலறலும்,&lt;br /&gt;கொடும் பல்லிகள் சொல்லும்,&lt;br /&gt;வீட்டு நாய் ஊளையும், அப சகுனமாகி&lt;br /&gt;சேது அன்னையைச் சஞ்சலப் படுத்தின.&lt;br /&gt;&lt;br /&gt;அன்னை மனம் அன்ரனியை நினைத்தது.&lt;br /&gt;சிந்தனை விரிய சிரசு விறைத்தது.&lt;br /&gt;'மகனுக்கு இன்னலா?' மனம் தவித்தது.&lt;br /&gt;இரவி வரும்வரை இரக்கமின்றி இன்னல்&lt;br /&gt;அவளை வாட்டி வதைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அதிகாலை,.. சாலை பார்த்து&lt;br /&gt;கலிசூழ சேது அன்னை&lt;br /&gt;கடந்து போகும், ஏகும் போர்புலிகள்&lt;br /&gt;முறுவலித்தனர், முகம் மலர&lt;br /&gt;சுகம் கேட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;'ஆண்டவரே உமக்குத் தோத்திரம்.&lt;br /&gt;மகவைக் காக்கும் கர்த்தரே உமக்கு நன்றி'&lt;br /&gt;இதயத்துள்ளே இறையைத் துதித்தாள்.&lt;br /&gt;இருப்பினும்...-&lt;br /&gt;அவள் தாய் தனத்தில் வலியொன்று&lt;br /&gt;தவித்துத் தவித்து தனக்குள் விசித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;என்றுமில்லா அமைதியோடு அன்றைய பகல் கடக்க,&lt;br /&gt;சூரியனும் மேற்கு வானை மெருகூட்டி மறைந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;'ஞாலத்து வான் தன் கருங்கோலத்தைக் காண்' என்றிட&lt;br /&gt;வெள்ளிகள் நிறைந்தன. விதவிதமாய் நிறத்தன.&lt;br /&gt;&lt;br /&gt;கீழே........&lt;br /&gt;தன் மனதைத் தொலைத்துத் தொலைத்து&lt;br /&gt;தென்றல் தவழ்ந்தது.&lt;br /&gt;கோள பூமியின் கொள்ளை அழகெல்லாம்&lt;br /&gt;தழுவி முகர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஈன்றவள் உள்ளத்தில் இனம் புரியா உணர்வு&lt;br /&gt;நள்ளிரவு தாண்டி நாழிகைகள் நகர&lt;br /&gt;தூரத்தில் எங்கோ வெடிகளின் ஓசை&lt;br /&gt;'அல்' அதன் அமைதியைக் கிழித்து&lt;br /&gt;துல்லியதாய் கேட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;மணித்துளிகள் நகர்ந்தன.&lt;br /&gt;உலங்கு வானூர்திகள் உறுமி உறுமிக்கடந்தன.&lt;br /&gt;வெள்ளி பூக்கும் விடிகாலை பொழுது&lt;br /&gt;குண்டுவீசு விமானங்கள் கூவிக் கொண்டு பறந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;அன்றைய பகல் தூரத்தில் எங்கோ&lt;br /&gt;அரச படைகளின் ஆங்காரம் மிகுந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பெற்ற மனமோ பித்தாகியது.&lt;br /&gt;அவளைக் கடக்கும்..&lt;br /&gt;புலிமுகங்கள் மௌனித்துக் கொண்டன.&lt;br /&gt;கலவரம் விழிகளில் ஒளிர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பிள்ளையர்க்கு சாது பின்னடைவு என்பதே!&lt;br /&gt;அன்னையிடம் தஞ்சமான அன்றைய சங்கதி.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நாட்காலை கொடிதாய் எழுந்தது.&lt;br /&gt;கறுப்பன் சோர்ந்து கவலையாய் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்னை அழைக்க நிமிர்ந்து பின்&lt;br /&gt;நீட்டிய காலில் தலையைச் சாய்த்தது&lt;br /&gt;பேசத் தெரியாத அப் பாசப்பிள்ளை.&lt;br /&gt;&lt;br /&gt;என்னவாயிற்று இவனுக்கு? என&lt;br /&gt;அன்னையின் உள்ளத்தில்...&lt;br /&gt;முன்னவன் கவலை முழுதாய் இருக்க,&lt;br /&gt;இன்னதன் நிலையும் இடையினில் சேர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அண்டை வீட்டு பிலோமினாவும், எதிர் வீட்டு மரியதாசும்&lt;br /&gt;கூட்டுச் சேர்ந்தனர் குசுகுசுத்துப் பேசினர்.&lt;br /&gt;வீட்டுக்கு வந்தர், விடயம் செப்பினர்.&lt;br /&gt;&lt;br /&gt;வாயிலும், வயிற்றிலும் அடித்து - அந்த&lt;br /&gt;வயத்தை ஈன்ற வனிதை அழுதாள்.&lt;br /&gt;&lt;br /&gt;கட்டிய ஆடையை உதறி உடுத்தி&lt;br /&gt;வெள்ளிக் கம்பிகள் ஓடிய குழலை முடித்து&lt;br /&gt;மருத்துவப்......பாசறை நோக்கி&lt;br /&gt;அப்பாசத்தீ புறப்பட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னால் வந்த கறுப்பனை உறுக்கி,&lt;br /&gt;முற்றத்து மரத்தில் முடிந்து கட்டி,&lt;br /&gt;மரியதாசிடம் கவனப்படுத்தி,&lt;br /&gt;மனித மாதா மகனை நாடினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;கால் போன போக்கில் வீதியில் செல்ல&lt;br /&gt;தாண்டி நின்றது ஒரு தமிழ்புலி வண்டி.&lt;br /&gt;இன்னவளின் நிலையை அறிந்த வேங்கையின்&lt;br /&gt;ஈருருளி அன்னையைச் சுமந்து நகர்ந்தது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6925413834765719932-4696988630903340450?l=venkaiyan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://venkaiyan.blogspot.com/feeds/4696988630903340450/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://venkaiyan.blogspot.com/2009/10/17.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6925413834765719932/posts/default/4696988630903340450'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6925413834765719932/posts/default/4696988630903340450'/><link rel='alternate' type='text/html' href='http://venkaiyan.blogspot.com/2009/10/17.html' title='அங்கம் 17'/><author><name>வேங்கையன் பூங்கொடி (காவியம்)</name><uri>http://www.blogger.com/profile/03445322919374394926</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://1.bp.blogspot.com/-yJU2OVtkJVc/TeJSVjeGpMI/AAAAAAAAABw/BetBpneXF6I/s220/54526902.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6925413834765719932.post-629839405775271943</id><published>2009-10-25T06:47:00.000-07:00</published><updated>2009-10-25T06:48:26.188-07:00</updated><title type='text'>அங்கம் 18</title><content type='html'>&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;விடைபகரா வித்தகன்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வார்த்தைகள் இன்றி அலைந்த மௌனம்&lt;br /&gt;வலிகளை வளர்த்துப் பெருத்தது. - நீர்&lt;br /&gt;கோர்த்த கண்கள் குளங்களாகி&lt;br /&gt;மெல்லியள் நிலையை உரைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இருவருக்குள்ளும் இடைவெளி ஓங்க&lt;br /&gt;இனிமை குமுறி அழுதது.&lt;br /&gt;காதல் என்னும் காவியம் அங்கே&lt;br /&gt;கலங்கிக் குழம்பித் தவித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அழுகைக் குரலது அவ்விடம் மேவ&lt;br /&gt;அம்மா ஓடி வந்தாள்.&lt;br /&gt;தன் மகவை வருடி உச்சி முகர்ந்து&lt;br /&gt;மனதின் உணர்வைப் பகிர்ந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் காயம் பட்ட காயம் தொட்டு&lt;br /&gt;கண்ணீர் உகுத்துக் கரைந்தாள்.&lt;br /&gt;கண்ட கணத்தில் அன்னையென்று- அப்&lt;br /&gt;பெண்ணை உணர்ந்தாள் செல்வி.&lt;br /&gt;&lt;br /&gt;தலையில் இருந்து கால்வரை தடவி&lt;br /&gt;தனயன் தேகம் நோக்கி நிமிர்ந்தவள்&lt;br /&gt;உருகும் சிலையென தவிப்புடன் நின்ற&lt;br /&gt;தாரகை கண்டு துணுக்குற்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;கண்களின் முன்னே நின்றவள் மெல்லக்&lt;br /&gt;கருத்துக்குள் அடர்ந்து நுழைய&lt;br /&gt;இன்னொரு புறத்தில் தாயவள் மனதில் ஓர்&lt;br /&gt;நுண்ணிழை தன்னால் அவிழ்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தாய் கண்மணியில் கேள்வி கோர்த்து&lt;br /&gt;தன் கண்மணியைப் பார்த்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;மௌனமாய்க் கண்மூடி, மனதிற்குள் போராடி,- சேது&lt;br /&gt;விடை பகராத வித்தகன் போலானான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்விடத்தே..&lt;br /&gt;சொல்லுக்குள் அடங்காத சங்கடம் நெளிந்தது.&lt;br /&gt;செல்விக்குத் தன்நிலை சஞ்சலம் மிகுந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மணித்துளிகள் மௌனத்திலும்,&lt;br /&gt;விழிகள் பேசத் துணியும் விநோதத்திலும் நகர்ந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;காலதேவன் கணக்கில்&lt;br /&gt;கூட்டல், கழித்தல் பிழைக்குமா?&lt;br /&gt;&lt;br /&gt;பேசிப் புரிந்திடப் பொழுதைத் தந்து&lt;br /&gt;சந்தர்ப்பம் கொடுத்துச் சறுகிப் போனவள்&lt;br /&gt;சங்கடம் தீர்க்கவும் வந்து சேர்ந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;உள்ள நிலையை உணர்ந்து கொண்டவள்&lt;br /&gt;உதவி செய்வதே நட்புக்கு அழகெனும்&lt;br /&gt;இயல்பு நிலைக்கு இலக்கணம் ஆகினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;'நேரம் ஆகிறது போகலாமா?'&lt;br /&gt;சகியை நோக்கி சகியவள் வினவ&lt;br /&gt;சடுதியில் ஏற்று ' தலையைச்&lt;br /&gt;சட்டென ஆட்டினாள் செந்தமிழ் சேயிழை.&lt;br /&gt;&lt;br /&gt;தலைதான் ஆடியது&lt;br /&gt;தறிக் கெட்ட மனமோ.. சேதுவை நாடியது.&lt;br /&gt;&lt;br /&gt;கண்கள் மூடிய காளை,&lt;br /&gt;'நேரம் ஆகிறது'&lt;br /&gt;எனும் சொல்வலி கேட்டு&lt;br /&gt;அகத்தினில் துடித்துப் புறத்தினில் விழித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்நேரம்          .&lt;br /&gt;சேயிழை அவளும் வாயிலாக் மடந்தையாய்&lt;br /&gt;'ஓம்' அசைவில் அவசரம் காட்ட&lt;br /&gt;இன்னல் இடியாய் இவனுள் விழுந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வஞ்சியர் இருவரும் வந்த வழி ஏகினர்.&lt;br /&gt;கொஞ்சுதமிழ் கோதையின்&lt;br /&gt;கெஞ்சும் விழிகளில் விஞ்சி நின்றது&lt;br /&gt;ஒரே ஒரு வினா!&lt;br /&gt;மிஞ்சி மேவப் பதிலது இருந்தும் - இவன்&lt;br /&gt;பகர மறுத்தான்.&lt;br /&gt;விரும்பாதவன்போல் விறைப்பாய் இருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;சின்னவன் நடப்பை&lt;br /&gt;பார்த்த தாயின் இதழ்களில் மென்னகை!&lt;br /&gt;&lt;br /&gt;எத்தனை நாடகம் பார்த்தவள் இத்தாய்!&lt;br /&gt;தந்தையை விஞ்சியா... தனயன் இருப்பான்?&lt;br /&gt;&lt;br /&gt;பெற்றவள் உணர்ந்தாள் - பெரும்&lt;br /&gt;கனம் கொண்டாள்.&lt;br /&gt;இன்னொரு பக்கம் இன்னலுள் மாண்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வாத உறவுகள் பிரிவிலே விலகும்.&lt;br /&gt;ஒருமித்த உறவுகள் பிரிவிலே இறுகும்&lt;br /&gt;புரியாத அன்னையா இவள்?&lt;br /&gt;&lt;br /&gt;புத்திரச் செல்வனைப் புரிந்தவள் அணைத்தாள்.&lt;br /&gt;தாய்மையின் அன்பிலே தனயனும் கரைந்தான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6925413834765719932-629839405775271943?l=venkaiyan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://venkaiyan.blogspot.com/feeds/629839405775271943/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://venkaiyan.blogspot.com/2009/10/18.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6925413834765719932/posts/default/629839405775271943'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6925413834765719932/posts/default/629839405775271943'/><link rel='alternate' type='text/html' href='http://venkaiyan.blogspot.com/2009/10/18.html' title='அங்கம் 18'/><author><name>வேங்கையன் பூங்கொடி (காவியம்)</name><uri>http://www.blogger.com/profile/03445322919374394926</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://1.bp.blogspot.com/-yJU2OVtkJVc/TeJSVjeGpMI/AAAAAAAAABw/BetBpneXF6I/s220/54526902.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6925413834765719932.post-9013699811628249525</id><published>2009-10-25T06:46:00.001-07:00</published><updated>2009-10-25T06:46:46.268-07:00</updated><title type='text'>அங்கம் 19</title><content type='html'>&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ஊர்த்தாய் கூற்று&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நெஞ்சில் இருப்பவன் நெருப்பெனச் சுட்டால்&lt;br /&gt;கஞ்சமலர் கருகியா போகும்?&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சிக் குலவும் காமம் தவிர்த்து&lt;br /&gt;விஞ்சி விறைக்கும் அவனாளுமை பிடித்தது.&lt;br /&gt;கெஞ்சுதல் என்பதை அறியா அவனின்&lt;br /&gt;நெஞ்சு நிறைத்த கர்வம் பிடித்தது.&lt;br /&gt;சிந்தையில் ஒளிரும் காதலை மறைக்கும் - அச்&lt;br /&gt;சிந்தனைச் சிற்பியைச் செல்விக்குப் பிடித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த நாட்கள்&lt;br /&gt;காவியக் கோதையின் கண்களை நனைத்திடினும்,&lt;br /&gt;படர்ந்த மனதில் இன்னும் அவனே&lt;br /&gt;பலமாய் பதியமிட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;நாட்கள் நகர்ந்தன. வாரங்கள் வளர்ந்தன. - பின்&lt;br /&gt;மாதம் ஆகி ஆண்டிலும்பாதி அவதியாய் தாண்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;ஏக்கம் நிறைந்த எண்ணக் குமரியின்&lt;br /&gt;கனவுகள் எல்லை கடந்தன.&lt;br /&gt;அவள்&lt;br /&gt;கண்ணுக்கினியவன் - இக்காவிய நாயகன்&lt;br /&gt;காயம் பட்ட காயம்தேறி&lt;br /&gt;மீண்டும் காவலரன் நிறைத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;காணும் தருணம்&lt;br /&gt;(அவன்) இறுகியும், (இவள்) உருகியும்&lt;br /&gt;இளநெஞ்சங்கள் துடித்தன.&lt;br /&gt;&lt;br /&gt;அதே சமயம்.......&lt;br /&gt;அந்நியப்படை முகாம்களுக்குள்&lt;br /&gt;ஆயுதக் கிடங்குகள் நிறைந்தன.&lt;br /&gt;அடுத்த தொடராய் மாபெரும் அழிப்பிற்கு&lt;br /&gt;ஆயத்தமாகி வளர்ந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;அமைதியைக் கிழி;க்கும் உலங்கு வானூர்திகள்,&lt;br /&gt;ஆகாயம் தமதென்று ஆர்ப்பரிக்கும் அவ்ரோக்கள்,&lt;br /&gt;நீரில், நிலத்தில், நீலவானில்&lt;br /&gt;சாகசம் புரியும் இயந்திரக் கழுகுகள்,&lt;br /&gt;குத்துக் கரணத்தில் குண்டுகள் ஈனும்&lt;br /&gt;சூப்பர் சொனிக்குகள்,&lt;br /&gt;வேவு காவும் வீரியக் குருவிகள் என&lt;br /&gt;பறந்து பறந்து யாழ் குடாநாட்டைக்&lt;br /&gt;குறிப்புகள் எடுத்தன.&lt;br /&gt;&lt;br /&gt;பேரினவாதப் புல்லர்களோடு&lt;br /&gt;அமெரிக்காவின் செல்லர்கள் பறந்தனர்,&lt;br /&gt;பயிற்சி பல வழங்கினர்.&lt;br /&gt;கெரில்லாப் போரதை அடக்கி ஒடுக்க&lt;br /&gt;வேண்டிய அனைத்தும் வல்லரசுகள்&lt;br /&gt;மாபெரும் பாரியாய் வாரி வழங்கின.&lt;br /&gt;&lt;br /&gt;பாக்கு நீரினைப் பரப்பு வெளிகளில்&lt;br /&gt;நீண்ட பெருத்த பீரங்கிக் கப்பல்கள்,&lt;br /&gt;சாத்தான் போல சாகரம் மீதில்&lt;br /&gt;வீரிய, சூரிய சண்டியக் கப்பல்கள்,&lt;br /&gt;அவற்றைச் சுற்றிச்சுற்றி விசைந்து திரியும்&lt;br /&gt;வீரியம் மிகுந்த ஆயுதப் படகுகள்,&lt;br /&gt;இவை வலிமை குறைந்த மக்களை அழிக்க&lt;br /&gt;வாரணம் வந்த வல்லசுரர்கள்&lt;br /&gt;இவைகள் நடாத்தும் ஊழிக் கூத்தை&lt;br /&gt;ஆயிரம் ஆயிரம் பாயிரம் எழுதலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;புலிகளின் கையிருந்த&lt;br /&gt;யாழ் குடாவை குதறிப் பிய்க்க&lt;br /&gt;காடையர் கூட்டம் ஆயிரக்கணக்கில்&lt;br /&gt;ஆழிக்கப்பல்களில் காத்துக் கிடந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;கரைகளில்&lt;br /&gt;ஆற்றுவாய், ஆலடி, மதவடி, பாலம்,&lt;br /&gt;முனைகடல், மணல்வெளியென எங்கெங்கு எதிரிக்கு&lt;br /&gt;இறங்குதளம், ஒதுங்குமுகம் இடரின்றி இருக்கிறதோ&lt;br /&gt;அங்கெல்லாம் புலியணியின் துணைப்படைகள்&lt;br /&gt;எக்கணமும் எதுவுமென்று ஏற்பும், எதிர்பார்ப்புமாக&lt;br /&gt;சின்னச் சின்னக் கைக்குண்டுகளோடு காத்திருந்தர்.&lt;br /&gt;போரிட்டு செயிக்க அல்ல, இவ்விழிப்புக் குழு&lt;br /&gt;ஊர்த் தூக்கம் கலைக்க.&lt;br /&gt;&lt;br /&gt;வீதிகள், பொதுவிடங்கள், நாற்சந்தி நிலைகள்&lt;br /&gt;நன்நூல் அகங்களருகென&lt;br /&gt;பொதுமக்கள் காப்பிற்கு பதுங்கும் குழிகள்&lt;br /&gt;புலிகளின் பார்வையில் புதிதாய் முளைத்தன.&lt;br /&gt;அதற்காக....&lt;br /&gt;கர்ணனை விஞ்சிய கற்பகத் தருக்கள்&lt;br /&gt;உயிரைக் கொடுத்து தங்களை ஈந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;போரை எதிர்நோக்கும் கூரிய வாழ்விலும்&lt;br /&gt;விழாக்களும், கடவுளர் உலாக்களும் நிகழ்ந்தன.&lt;br /&gt;பாரம்பரிய விழுமியங்களோடு பைந்தமிழ் கலைகளும்&lt;br /&gt;வளர்ந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;அன்றும்...&lt;br /&gt;மெய்யாய் நிறைந்திருக்கும் முத்துமாரியம்மனுக்கு&lt;br /&gt;ஊர் கூடித் தேரிழுக்கும் ஒய்யாரத் திருவிழா&lt;br /&gt;காலத்திற்கு ஒவ்வாத கார்முகிலி வான் நிறைக்க&lt;br /&gt;போரிற்குப் புறப்பட்டாள் முத்துமாரியம்மை.&lt;br /&gt;தேர்ச் சில்லு நகரவில்லை&lt;br /&gt;ஊர்கூடி இழுத்தது.&lt;br /&gt;சாது சாய்ந்து தேர் நிலத்தில் பதிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;காண்டீபனைக் காக்க கண்ணன் பதித்த தேர்போல்&lt;br /&gt;அங்கொரு அறிகுறி ஊருக்குத் தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஊர் கலங்கித் தவித்தது. கேடு வரப் போகிறதோ?&lt;br /&gt;பதற்றமுற்ற இச்சேதி வாய்ப் பந்தயத்தில் குதித்தது.&lt;br /&gt;இதனை உற்றவரும், கேட்டவரும்&lt;br /&gt;ஊர்த் தாயின் கூற்றாக ஏற்றுக் கலியடைந்தர்.&lt;br /&gt;ஆதலால் ஊருக்குள் எப்போதும் இல்லாத&lt;br /&gt;அச்சம் ஒன்று நுழைந்தது. - அது&lt;br /&gt;எல்லோர் உள்ளத்திலும் உச்சம் பெற்று நிலைத்தது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6925413834765719932-9013699811628249525?l=venkaiyan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://venkaiyan.blogspot.com/feeds/9013699811628249525/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://venkaiyan.blogspot.com/2009/10/19.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6925413834765719932/posts/default/9013699811628249525'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6925413834765719932/posts/default/9013699811628249525'/><link rel='alternate' type='text/html' href='http://venkaiyan.blogspot.com/2009/10/19.html' title='அங்கம் 19'/><author><name>வேங்கையன் பூங்கொடி (காவியம்)</name><uri>http://www.blogger.com/profile/03445322919374394926</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://1.bp.blogspot.com/-yJU2OVtkJVc/TeJSVjeGpMI/AAAAAAAAABw/BetBpneXF6I/s220/54526902.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6925413834765719932.post-3676747602355704729</id><published>2009-10-25T06:44:00.000-07:00</published><updated>2009-10-25T06:45:05.226-07:00</updated><title type='text'>அங்கம் 20</title><content type='html'>&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;அந்தரவான் கந்தக முட்டை&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கள இனவாதம் பெரும் சினம் கொண்ட ஒருபாகம்&lt;br /&gt;யாழ் குடாவின் வடகரையோரம்.&lt;br /&gt;&lt;br /&gt;மனவலிமை மிகுபுலியர் அணித் தலைவனோடு&lt;br /&gt;செயலாற்று வீரர் பலர் செகம் கண்டதும்,&lt;br /&gt;முப்படைகள் கக்கு குண்டில் முகம் கொடுக்கையில்&lt;br /&gt;உப்புடைக் காற்றுரசி உரம் பெற்றதும்,&lt;br /&gt;வடமராட்சிக் கரைகளுக்கே உரித்தானது - இது&lt;br /&gt;வரலாற்றுச் சுவட்டுள்ளும் குறிப்பானது.&lt;br /&gt;&lt;br /&gt;கடலோடு விளையாடிக் காயத்தில் உரமேறி&lt;br /&gt;மிடுக்காக வாழும் இம்மக்கள்&lt;br /&gt;விடுதலை வேங்கையரின் அத்திவாரக் கற்கள்.&lt;br /&gt;ஆதலால்;&lt;br /&gt;வடமராட்சி என்பது ஆளும் வர்க்கம்&lt;br /&gt;வெறுக்கும் வைரியாகி வளர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வுரம் ஊறும் ஊர்கள் அழிக்க, உலகெலாம் கையேந்தி&lt;br /&gt;ஆளும் வர்க்கம் அருந்திட்டங்கள் வகுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஓரிரு வாரங்களில்..&lt;br /&gt;இராணுவ ஒத்திகைகள் முன்னேறு முனைப்புகள்&lt;br /&gt;கரையோரம் எங்கெங்கும் அரங்கேறின.&lt;br /&gt;&lt;br /&gt;பயங்கர வாதம் அழிப்பதாய் பகல் வேசம் போட்டு&lt;br /&gt;பாரெங்கும் அரசு பல்லிளித்து நடித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஓர்மம் மிக்க ஒப்பில்லா மக்களை&lt;br /&gt;ஒழித்துக் கட்ட அரச பயங்கரத்தின்&lt;br /&gt;ஆயுதமுனைகள் கூர்மை மிகுந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;இராட்சத அவ்ரோக்களில் பெற்றோல் பீப்பாக்கள்&lt;br /&gt;அத்தோடு அமிலங்கள் கலந்த அழுக்குத் திராவகம்.&lt;br /&gt;குறியின்றி ஏகும் கனரகக் குண்டுகள்,&lt;br /&gt;உறுமி உறுமி உருக்குப் பறவைகள் எறியும்&lt;br /&gt;கந்தகக் கணைகளும் தத்தம் பலம் காட்ட,&lt;br /&gt;எங்கே எதுவென்று குறிக்க முடியாது&lt;br /&gt;நாற்புறமும் கந்தகப் புகையோடு&lt;br /&gt;கட்டிடப் புழுதியும் எழுந்து விரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தரைப்படை , கடற்படை, மேவிய வான்படை&lt;br /&gt;மூர்க்கர் ஆணைக்குள் முழுமூச்சானது.&lt;br /&gt;&lt;br /&gt;போரியல் என்பது தமிழர் வாழ்வியல் பாடம்.&lt;br /&gt;பின் வாங்கல் என்பது&lt;br /&gt;அவதந்திரத்தை வெல்லும் போரின் உபாயம்.&lt;br /&gt;&lt;br /&gt;மக்களை மனதிடை சுமந்த மறவர்&lt;br /&gt;அழிவகள் தவிர்க்க விழைந்தனர்.&lt;br /&gt;தமிழ் உயிர்களை நினைத்து எதிரியைப் பொருதும்&lt;br /&gt;உலைக்கள நிலையைத் துறந்தனர்.&lt;br /&gt;பல் உயிர்களைக் காக்கும் உன்னத பணிக்கு&lt;br /&gt;தங்களை மாற்றிக் கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;எதிர்ப்புகள் இன்றி காவலரன் கடந்து&lt;br /&gt;இராணுவம் ஊருக்குள் நுழைய&lt;br /&gt;இராட்சதப் பறவைகள் அந்தர வானில்&lt;br /&gt;கந்தக முட்டைகள் இட்டன.&lt;br /&gt;அங்குல நகர்விற்கும் ஆயிரம் எறிகணைகள்&lt;br /&gt;வாரணமிருந்து ஏகின.&lt;br /&gt;&lt;br /&gt;மனவலு இழந்த மோடையக் கிலியரால்&lt;br /&gt;பல்குழல் சுழல்கள் சிவந்தன.&lt;br /&gt;அதை உறுதிப் படுத்திச் செல்லக் கெலிகள்&lt;br /&gt;உயரிய கலிபரை முடுக்கின.&lt;br /&gt;&lt;br /&gt;இதன்பால் எழுந்த கந்தகப் புயலொடும்,&lt;br /&gt;இரும்புத் துகளொடும்&lt;br /&gt;அந்தரித்துத் தமிழினம் அவதியுற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;குண்டுகள் வீழ்ந்து குதறிப் பிய்த்தது&lt;br /&gt;குவலயப் பரப்பை மட்டுமா?&lt;br /&gt;அன்னை வயிற்றுச் சின்ன உயிரிருந்து&lt;br /&gt;அந்திமகால சருகுகள் வரைக்கும்&lt;br /&gt;தேடித்தின்று செங்களப் பேயானது.&lt;br /&gt;பதுங்கு குழிகள்&lt;br /&gt;மிஞ்சிய மக்களைக் காத்தன.&lt;br /&gt;&lt;br /&gt;அதே நேரம்&lt;br /&gt;தென்மேற்குத் திசையிருந்து உள்ளிட்ட ஊனப்படை&lt;br /&gt;அங்குலம் அங்குலமாய் ஊருக்குள் நுழைந்தனர்;.&lt;br /&gt;&lt;br /&gt;ஊருக்குள் நிலைத்திருந்த இன்னொரு பிரிவினர்&lt;br /&gt;ஊரின் மத்திக்குள் தம்பலத்தைப் பரப்பினர்.&lt;br /&gt;&lt;br /&gt;மக்கள்&lt;br /&gt;அங்கங்கள் தெறித்தும், குடல்கள் சிதைந்தும்,&lt;br /&gt;மண்டைகள் சிதறியும்,&lt;br /&gt;மாகோரச் சாக்களம் அம்மண்ணிலே நிகழ்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;எதிர்ப்பில்லா நகர்வுக்கே இந்நிலை என்றால்?.......&lt;br /&gt;&lt;br /&gt;எங்கிருந்து எமன் வரவு?&lt;br /&gt;எத்திசையால் அவன் நகர்வு?&lt;br /&gt;செங்கடல்கள் கொப்பழிக்க செந்தமிழர் இடம் பெயர்ந்தர்.&lt;br /&gt;&lt;br /&gt;தேக்கிய ஆவனமும், தூக்கிய தோள்பையும்&lt;br /&gt;நோக்கிய திசையறியாது அகதியாக நகர்ந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தீங்கிழைக்க என்றே பிறந்த ஆங்கார வல்லூறுகள்&lt;br /&gt;ஆகாயத்திலிருந்து எரிதழல்கள் உமிழ, உமிழ&lt;br /&gt;மனையிழந்த மக்களெல்லாம் கோ உறையும் இல்லிலும்,&lt;br /&gt;நாமகள் அகத்திலும் கூடிக் கூடி முகாமிட்டர்.&lt;br /&gt;&lt;br /&gt;பூங்குழலி குடும்பமும், செல்வியின் சுற்றமும்&lt;br /&gt;அண்டை, அயலென சூழ்ந்த உறவுகளும்&lt;br /&gt;மிரட்சியோடு, உயிரைக் கையில் பிடித்தபடி&lt;br /&gt;உமைபாகன் காலடியில் உறைத்துப் போயிருந்தர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6925413834765719932-3676747602355704729?l=venkaiyan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://venkaiyan.blogspot.com/feeds/3676747602355704729/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://venkaiyan.blogspot.com/2009/10/20.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6925413834765719932/posts/default/3676747602355704729'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6925413834765719932/posts/default/3676747602355704729'/><link rel='alternate' type='text/html' href='http://venkaiyan.blogspot.com/2009/10/20.html' title='அங்கம் 20'/><author><name>வேங்கையன் பூங்கொடி (காவியம்)</name><uri>http://www.blogger.com/profile/03445322919374394926</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://1.bp.blogspot.com/-yJU2OVtkJVc/TeJSVjeGpMI/AAAAAAAAABw/BetBpneXF6I/s220/54526902.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6925413834765719932.post-7829017190526696274</id><published>2009-10-25T06:42:00.000-07:00</published><updated>2009-10-25T06:43:12.371-07:00</updated><title type='text'>அங்கம் 21</title><content type='html'>&lt;span style="font-weight: bold;font-size:130%;" &gt;இருதலைக் கொள்ளி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எழில் மிகு கரைமகள் கலிகளைச் சுமந்தாள்.&lt;br /&gt;அங்கு இங்கென உடல் நலமிழந்தாள்.&lt;br /&gt;பொழில்கள் பொசுங்கின. அலைகள் அழுதன.&lt;br /&gt;கந்தகம் சுமந்து காற்று நொந்தது.&lt;br /&gt;பட்சிகள் சிதறின, வீட்டுநாய்களெல்லாம்&lt;br /&gt;வேட்டோசை கேட்டு வீதிவழி ஓடின.&lt;br /&gt;&lt;br /&gt;ஆரியத்தால் உட்புகுந்த கூரிய இழிவுகள்&lt;br /&gt;குலை தெறிக்க ஓடின. சாதியம் மறைந்தது.&lt;br /&gt;உயர்ந்தவர், தாழ்ந்தவர் பேதங்கள் ஒழிந்தது.&lt;br /&gt;தமிழர் மட்டும் தனித்து நின்றனர்.&lt;br /&gt;மதங்கள் ஆண்ட மனங்கள் அழிந்தன.&lt;br /&gt;மனிதம் பூண்ட சிந்தைகள் நிறைந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;முன்னே வீழும் எறிகணைகள்&lt;br /&gt;பின்னே விரட்டும் வேட்டொலிகள்&lt;br /&gt;இதற்குள்&lt;br /&gt;காயம் பட்டும், கதறித் துடித்தும்&lt;br /&gt;உயிரைக் காக்க மக்கள் விரைந்தனர்&lt;br /&gt;கோயில்கள், பள்ளிகள் முகாம்களாகி&lt;br /&gt;அகதிகள் கதைக்கு கருக்களம் கொடுத்தன.&lt;br /&gt;&lt;br /&gt;இராணுவ அணிகள் தரைவழி நகர்ந்தன.&lt;br /&gt;அகப்பட்ட உயிர்களை தத்தம் கவசமாய் ஆக்கின.&lt;br /&gt;&lt;br /&gt;உலைக்கள வீரர்கள் உண்மையை அறிந்ததால்&lt;br /&gt;தங்களை மறைத்தர்.&lt;br /&gt;எதிர்ப்பின்றி நகர்ந்த எதிரிப் படையதால்&lt;br /&gt;எல்லா இடத்திலும் இழவுகள் நிறைந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;காவிய நாயகியும் அவள் கவினுறு தோழியும்&lt;br /&gt;மூலையில் ஒடுங்கிய முகாமினை வளைத்து&lt;br /&gt;பாரிய இராணுவம் ஆளணி நிறைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;எந்த நிமிடமும் எதுவும் நடக்கலாமென - தமிழ்&lt;br /&gt;சிந்தைகள் எல்லாம் கந்தையாகிக் கசங்கின.&lt;br /&gt;&lt;br /&gt;ஆலய அருகே&lt;br /&gt;இராணுவர் கண்டதும் சிறுவர்கள் கதறினர்&lt;br /&gt;அன்னையைத் , தந்தையை இறுக்கிக் கட்டி&lt;br /&gt;பெருங்குரல் எடுத்து வீரிட்டு அலறினர்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்நேரம்&lt;br /&gt;இன்னலை விதைக்கும் இனவாதக் காடையர்&lt;br /&gt;அகதிகள் அனைவரையும்&lt;br /&gt;ஆலயம் விட்டு வெளிவரப் பணித்தர்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர் கோழையர் அல்ல&lt;br /&gt;எனினும்&lt;br /&gt;மார்தட்டி நேர் நடக்கும் மல்யுத்தமா இது?&lt;br /&gt;கூர் விழி அசைக்குமுன் உருக்குக் குண்டுகள்&lt;br /&gt;உடலெங்கும் குதறும் இயந்திர களமல்லவா!&lt;br /&gt;உற்றவர் வருவரா? பெற்றவர் வருவரா?&lt;br /&gt;தத்தம் பிள்ளையரை தம் கையால் கொடுப்பரா?&lt;br /&gt;கோயிலின் உட்புறம் உறுதியாய் உறைந்திருந்தர்.&lt;br /&gt;&lt;br /&gt;மங்கல நாதம் முழங்கு திருக்கோயில்&lt;br /&gt;மயான அமைதியை மண்டியிட்டு ஏற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கள இராணுவர் சினத்திற்கு உள்ளாகினர்.&lt;br /&gt;சுடுகலன் விசையழுத்திக் கர்வம் காட்டி நின்றர்.&lt;br /&gt;&lt;br /&gt;மக்கள் மசிய மறுத்தர். மகேசனடி தொக்கினர்&lt;br /&gt;பொறுமை மீறிய&lt;br /&gt;காடைக் கும்பல் கடவுளை மிதித்தது.&lt;br /&gt;ஆண்டவன் சந்நிதியை அழுக்குப் படுத்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆயுத முனையில் ஆண்களை இழுத்து&lt;br /&gt;வீதியில் உதைத்தது.&lt;br /&gt;கணவனும், பிள்ளையும் ஆயுத முனையில்&lt;br /&gt;தாய்மையும், பெண்மையும் தவித்தன.&lt;br /&gt;தலையில் அடித்து அழுதன.&lt;br /&gt;&lt;br /&gt;வீரம் இல்லா வேற்றுவர் படையணி&lt;br /&gt;யுவர்களை எல்லாம்&lt;br /&gt;மாபெரும் கயிற்றில் பிணைத்து&lt;br /&gt;தங்களைக் காக்கும்&lt;br /&gt;மனித... கேடயங்கள் ஆக்கின.&lt;br /&gt;&lt;br /&gt;பிறிதொரு காடையர் ஆலய உட்புறம்&lt;br /&gt;பெண்களைச் சீண்டி இரசித்தனர். -அதில்&lt;br /&gt;உள்ளத்தை அள்ளிய&lt;br /&gt;கொள்ளை எழில்களை கைதென்ற பெயரால்&lt;br /&gt;வதைத்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்பிள்ளை, பெண்பிள்ளை அல்லாடி அல்லாடி&lt;br /&gt;தாய் மனங்கள் கெஞ்சின, கொதித்தன, தவித்தன.&lt;br /&gt;&lt;br /&gt;பெற்றவர் உற்றவர் பெரிதாய் குரலெழுப்ப&lt;br /&gt;எண்ணிரு கன்னியர் காடையர் கரங்களில்&lt;br /&gt;கைதாகிக் கலங்கினர்.&lt;br /&gt;அதில்&lt;br /&gt;காவியக் கோதையும் கலங்கரைத் தோழியும்&lt;br /&gt;கவலை மிகுந்து நலிந்து சோர்ந்தனர்.&lt;br /&gt;கைதுக்கு மறுத்துக் கதறிடும் கோதையரை&lt;br /&gt;கொடும் கரங்களால் அறைந்து&lt;br /&gt;காடையர் மூடிய ட்ரக்கினுள்&lt;br /&gt;திக்கு முக்காடித் தூக்கிப் போட்டர்.&lt;br /&gt;&lt;br /&gt;யுவர்களைக் கிழக்கு முகம் நோக்கியும்,&lt;br /&gt;யுவதியரை மேற்கே நோக்கியும் இழுத்து&lt;br /&gt;எதிரெதிர் புறமாய் இராணுவம் நகர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கணவனின் கைதா? பெண்மகள் கதறலா?&lt;br /&gt;பூரணத்தாய் புலம்பித் தவித்தாள்&lt;br /&gt;குழலியின் அன்னையும் கூடவே அரற்றினாள்&lt;br /&gt;&lt;br /&gt;எவரிடம் அறிவது? எங்குதான் செல்வது?&lt;br /&gt;யாரை மீட்பது? யாரை விடுவது?&lt;br /&gt;இருதலைக் கொள்ளியாய் அங்கிருந்து அழுதவளை&lt;br /&gt;ஆதரவாக தொட்டது ஒருகரம்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6925413834765719932-7829017190526696274?l=venkaiyan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://venkaiyan.blogspot.com/feeds/7829017190526696274/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://venkaiyan.blogspot.com/2009/10/21.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6925413834765719932/posts/default/7829017190526696274'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6925413834765719932/posts/default/7829017190526696274'/><link rel='alternate' type='text/html' href='http://venkaiyan.blogspot.com/2009/10/21.html' title='அங்கம் 21'/><author><name>வேங்கையன் பூங்கொடி (காவியம்)</name><uri>http://www.blogger.com/profile/03445322919374394926</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://1.bp.blogspot.com/-yJU2OVtkJVc/TeJSVjeGpMI/AAAAAAAAABw/BetBpneXF6I/s220/54526902.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6925413834765719932.post-6516959104656052703</id><published>2009-10-25T06:39:00.000-07:00</published><updated>2009-10-25T06:40:39.063-07:00</updated><title type='text'>அங்கம் 22</title><content type='html'>&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;கலைமான்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திருட்டும், கொலையும், பலாத்காரமும்&lt;br /&gt;பொருட்டே இன்றிப் புரிந்த ...&lt;br /&gt;கணக்கில் அடங்காக் காடையர் எல்லாம்&lt;br /&gt;தமிழரை வதைக்கும் படைகளில் நிறைந்தர்.&lt;br /&gt;பெண்களை இழுத்து உரசிப் பார்ப்பதும்,&lt;br /&gt;கன்னி மலர்களைக் கசக்கி முகர்வதும்&lt;br /&gt;காமுகர் வாழ்வில் களியாட்டம் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;தட்டி கேட்க எவருமே இல்லை -அரசு&lt;br /&gt;ஊட்டி வளர்த்து உப்பரிகை போட்டது.&lt;br /&gt;மதுவோடு மாதாய் காடையர் மகிழ - தமிழ்&lt;br /&gt;கன்னியர் வாழ்வு களங்களுக்கு ஏகியது.&lt;br /&gt;&lt;br /&gt;எண்ணிரு பெண்களும் அரண்டு மருண்டனர்.&lt;br /&gt;பீதியில் விழிகள் பிதுங்கி வழிந்தனர்.&lt;br /&gt;காடைகளுக்குள் கலங்கித் தவித்தர்.&lt;br /&gt;ஒருவரை ஒருவர் இறுகப் பிடித்து&lt;br /&gt;நூலக மூலையில் நடுங்கிக் கிடந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;செல்வி, குழலி இருவரை விட்டும்&lt;br /&gt;துடிப்பும், துணிவும் தூர ஓடின.&lt;br /&gt;&lt;br /&gt;வெறி பிடித்த ஓநாய்கள் விருந்துக்கு விரைந்தன.&lt;br /&gt;காயமெங்கும் காமமுற்று கண்களால் ஒளிர்ந்தன.&lt;br /&gt;தறுதலைத் தலைவனாய் நின்றவன் கண்கள்&lt;br /&gt;செல்வியின் மேனியை மேய்ந்தது. - கண்டு&lt;br /&gt;அவள் உள்ளம் அச்சத்தால் உறைந்தது.&lt;br /&gt;குழலியை இறுக்கிப் பிடித்துக் குலமகள்&lt;br /&gt;அதில் தன்நிலை நிமிர்த்தித் தேறினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;தலைமை வெறியனின் 'கலைமான்" இவளென&lt;br /&gt;காடையர் குறிப்பாய் உணர்ந்ததும்&lt;br /&gt;எண்ணிரு கன்னியர் நாடியே - அவளைத்&lt;br /&gt;தனியே இழுத்துப் போட்டர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஓவெனக் கோதையர் கதறிடக் கதறிட&lt;br /&gt;தாவித் தாவியே அறைந்தனர், அடக்கினர்.&lt;br /&gt;&lt;br /&gt;தனியே பிரிந்த சேயிழை நோக்கி&lt;br /&gt;'கனியே!" என்று காமுகன் நெருங்கினான் - அவள்&lt;br /&gt;விலகி விலகி நூலகம் எங்கும்&lt;br /&gt;நுழைந்து நுழைந்து ஓடினாள்.&lt;br /&gt;வேட்டைக்கு வந்தவன்&lt;br /&gt;ஒருவனா? இருவரா?&lt;br /&gt;மாட்டிக் கொண்டது புள்ளிமான்.&lt;br /&gt;&lt;br /&gt;பார்த்து நின்ற மற்றைய மங்கையர் பீதியால் அலறினர்.&lt;br /&gt;பெருங்குரல் எடுத்துக் கூக்குரலிட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;கயவர் பிடியில் செந்தமிழ் செல்வி&lt;br /&gt;கடித்து சுவைக்க காமுகன் நெருங்கினான்.&lt;br /&gt;&lt;br /&gt;சேதுவின் காதலி சீறி உலுப்பினாள்&lt;br /&gt;கனலிட்ட விழியுடன் காறி உமிழ்ந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;காறி உமிழ்ந்தது கயவனைச் சீண்டிட&lt;br /&gt;காவியச் செல்வியின் கன்னங்கள் பழுத்தன.&lt;br /&gt;&lt;br /&gt;அடியே அறியா அவ்விள நங்கையின்&lt;br /&gt;அவயங்கள் புண்பட்டன.&lt;br /&gt;இடிபோல் விழுந்த அரக்கன் பலத்தால்&lt;br /&gt;பெண்மை அதிர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இகத்தில் இதுநாள் அறியா உணர்வு&lt;br /&gt;அவளுள் மிகுந்தது.&lt;br /&gt;முகத்தில் அறைந்த பேயைப் பார்த்து&lt;br /&gt;மலங்க விழித்தது - அவளுடல்&lt;br /&gt;மயங்கிச் சரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அதே வேளை&lt;br /&gt;நூலக அண்மையில் வேட்டுகள் ஒலிக்க&lt;br /&gt;வெருண்ட காடையர் வெளியே விழுந்து&lt;br /&gt;உருண்டு உயிர் காத்தர்.&lt;br /&gt;&lt;br /&gt;மயங்கிய பெண்மையை முகரத் துடித்தவன்&lt;br /&gt;உயிரது அலற உடன் விட்டகன்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;காமக் கூத்துக்கு நூலகம் பிரிந்த&lt;br /&gt;படையினர் ஈர்பத்தே!&lt;br /&gt;ஆதலால்&lt;br /&gt;தனியே இருப்பது தம்முயிர் போக்கும்&lt;br /&gt;எனும் நிலை உணர்ந்திட&lt;br /&gt;எழில் மங்கையர் விடுத்து&lt;br /&gt;அங்கிருந்து அகன்று - தம்&lt;br /&gt;படையணி நாடிச் சென்றர்.&lt;br /&gt;&lt;br /&gt;மருண்ட மங்கையர் விரைந்து எழுந்தர்.&lt;br /&gt;நங்கையர் மானம் நலமே காக்க&lt;br /&gt;இவ்விடம் விட்டு நகர்தல் நன்றென&lt;br /&gt;சுந்தரியர் தம் சிந்தனை செப்பினர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6925413834765719932-6516959104656052703?l=venkaiyan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://venkaiyan.blogspot.com/feeds/6516959104656052703/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://venkaiyan.blogspot.com/2009/10/22.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6925413834765719932/posts/default/6516959104656052703'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6925413834765719932/posts/default/6516959104656052703'/><link rel='alternate' type='text/html' href='http://venkaiyan.blogspot.com/2009/10/22.html' title='அங்கம் 22'/><author><name>வேங்கையன் பூங்கொடி (காவியம்)</name><uri>http://www.blogger.com/profile/03445322919374394926</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://1.bp.blogspot.com/-yJU2OVtkJVc/TeJSVjeGpMI/AAAAAAAAABw/BetBpneXF6I/s220/54526902.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6925413834765719932.post-706570588804805193</id><published>2009-10-25T06:30:00.000-07:00</published><updated>2009-10-25T06:37:56.670-07:00</updated><title type='text'>அங்கம் 23</title><content type='html'>&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;வேங்கையன் பூங்கொடி&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிறிது நேரம் பெரிதாய் கழிய,&lt;br /&gt;வாசிகசாலை வாசற்புறத்திலே&lt;br /&gt;ஓசையில்லா அசைவுகள் தெரிந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;வெளியே செல்ல விரைந்த மங்கையர்&lt;br /&gt;விழிகளில் வியப்பு விரிந்தது.&lt;br /&gt;அவர் மனதிடை மகிழ்ச்சி மலர்ந்தது.&lt;br /&gt;காத்திட வந்த அக்காவலர் கூட்டம்&lt;br /&gt;களப் புலி அணியெனத் தெரிந்ததும்&lt;br /&gt;பேதமையின்றி அவ்வயங்களை நோக்கி&lt;br /&gt;வாமையர் துள்ளி ஓடினர்.&lt;br /&gt;வேட்டுகள் ஒலிக்கும், வீரர்கள் வழிக்கும்&lt;br /&gt;பூட்டுகள் போட்டுப் பார்த்தால்&lt;br /&gt;புரியாத கதையும் புரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;மங்கையர் அனைவரும் மகிழ்ச்சியில்;&lt;br /&gt;துளிர்க்கக் குழலி மட்டும் குமைந்தாள்.&lt;br /&gt;மென்மகள் செல்வியின் புன்னகை உதட்டிலும்,&lt;br /&gt;பொன்னிறக் கழுத்திலும் செவ்வரி கண்டு விசித்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அக்கணம்&lt;br /&gt;நோட்டமிட்டிட நூலகம் நுழைந்தான் ஓர் காளை - அங்கு&lt;br /&gt;பாட்டம் கிடந்த பசுங்கிளி பார்த்து -அவனது&lt;br /&gt;நுண்ணிய இழைகளும் அதிர்ந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த மயங்கிய மலர்க்கொடியின் சுருங்கிய கோலம்&lt;br /&gt;இம்மறவன் உயிரை கிழிக்க&lt;br /&gt;அனலிடை வீழ்ந்ததாய்த் துடித்தான்.&lt;br /&gt;காடையர் கையில் கன்னி மலரா?&lt;br /&gt;கண்களில் கோபம் கொழித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அவள் கன்னத்தில் பதிந்த கைத்தடங்கள் - இவன்&lt;br /&gt;எண்ணத்தில் வீழ்ந்து வதைத்தன.&lt;br /&gt;செவ்விள மேனியின் நகமுனைக் கீறல்கள் &lt;br /&gt;பெருஞ்சீற்றத்தைப் புலிக்குள் வார்த்தது.&lt;br /&gt;அந்த மெல்லியள் மயக்கமும், மனதிடை உருக்கமும்&lt;br /&gt;மறமன்னவன் மனதை அசைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தோழரை அழைத்துத் தண்ணீர் கேட்ட&lt;br /&gt;தளபதி சேதுவை நோக்கி&lt;br /&gt;கொள்கலன் ஒன்றைக் கொடுக்க வந்த&lt;br /&gt;இனியவன் இதயம் பதைத்தான்.&lt;br /&gt;முகத்தில் செவ்வரி ஓடிய&lt;br /&gt;சின்னவள் பார்த்து&lt;br /&gt;சிந்தை நொந்து கசிந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;மயங்கிய நிலவின் அருகே மறவன்&lt;br /&gt;தயங்கித் தயங்கி வந்தே&lt;br /&gt;கொள்கலன் கவிழ்த்து, குவளை நீரை&lt;br /&gt;அவ்வெழில் நிலா முகத்தில் தெளித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;நீரது பட்டுத் தெளிந்த குலமகள்&lt;br /&gt;வேல்விழி திறக்கா வாமையாய் நலிந்தாள்.&lt;br /&gt;ஆவி துடித்திட, அழுகை உள்ளிட -அவள்&lt;br /&gt;மூடிய இமைக்குள் கயல்கள் நீந்தின.&lt;br /&gt;ஓரவிழிகளில் ஈர அருவிகள்&lt;br /&gt;இருபுறமாய் தம்மைக் கசித்தன.&lt;br /&gt;&lt;br /&gt;செல்வியை அழைத்துத் தேற்ற நினைத்தாள்&lt;br /&gt;சுந்தரப் பூங்குழலி.&lt;br /&gt;பாங்கியைத் தேடிப் பயத்தில் நலிந்தாள்&lt;br /&gt;இக்காவியப் பொன்னலரி.&lt;br /&gt;வீணரை நினைத்துப் பதைத்தாள்&lt;br /&gt;அவள் விழிகளைத் திறக்கப் பயந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;கோர நினைவினில் நடுங்கும்&lt;br /&gt;கொள்ளை எழில்மகளிவளின்&lt;br /&gt;மெல்லிய கைகளைப் பற்றி&lt;br /&gt;இந்த வீரத்திருமகன் சிரித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆண் கரம் பட்டதும் அணங்கவள் கனன்றாள்.&lt;br /&gt;ஆவேசத்தில் ஆர்த்து விழித்தாள்.&lt;br /&gt;கூரியவிழியில் வீரியம் வெளிக்க&lt;br /&gt;பாரைப் பிளக்கும் பூகம்பம் ஆனாள்.&lt;br /&gt;&lt;br /&gt;சுற்றிலும் நின்ற விடுதலைத் தோழர்கள்&lt;br /&gt;விழிகளினாலே வியந்து நகைத்தர்.&lt;br /&gt;உற்ற மறுகணம் ஓர்மம் ஒடுங்கிட,&lt;br /&gt;வேங்கையன் பூங்கொடி வெட்கத்தில் சிவந்தாள்.&lt;br /&gt;காண்பது கனவா? சுந்தர நனவா?&lt;br /&gt;&lt;br /&gt;கரமதைப் பற்றிய காளையைப் பார்த்தாள்.&lt;br /&gt;கடமையால் அவன் முகம் இறுகவுமில்லை&lt;br /&gt;நாணத்தால் இவள் தலை சாயவுமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவர் விழியில் ஒருவரைப் பார்த்து&lt;br /&gt;இருமனம் கூடி ஒரு கணம் களித்து&lt;br /&gt;உள்ளங்கள் அங்கே உரையாடின.&lt;br /&gt;&lt;br /&gt;பார்த்த தோழி பரவசத்தோடு&lt;br /&gt;பார்வையை நகர்த்தி சங்கடம் கொண்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;'உறுதியும், அறிவும் வாராத வரைக்கும்&lt;br /&gt;உன்நிலை செல்லரிக்கும்"&lt;br /&gt;&lt;br /&gt;உழு உரைத்த உலைக்கள மொழியில்&lt;br /&gt;உரம் மிகப்பெற்றாள் அவன் உள்ளக்காவேரி.&lt;br /&gt;பெண்களை மீட்கும் உன்னத பணியது&lt;br /&gt;வெற்றியைத் தந்திடவே இனி அவ்விடம் நிற்பது&lt;br /&gt;ஆபத்தை தருமென இனியவன் செப்பி நின்றான்.&lt;br /&gt;காத்த நங்கைகள் எண்ணிரு மங்கையரை&lt;br /&gt;கண்ணாய் நகர்த்திக் காப்பிடம் சேர்த்தபின்னர்&lt;br /&gt;சேது தோளில் துவக்குடன், தோழர் அணியுடன்&lt;br /&gt;செல்வியைப் பிரிந்து சென்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;எழில்மகள் விழிகளில் ஈரருவிகள் அரும்பின.&lt;br /&gt;வலிகளைச் சுமந்தும் வதனங்கள் மலர்ந்தன.&lt;br /&gt;மண்மீட்பு நோக்கிய பயணங்கள் தொடர்ந்தன.&lt;br /&gt;ஈழமண் மீதிலே இக்காவியகதையின் அங்கங்கள் வளர்ந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;பாகம் 1&lt;br /&gt;முற்றும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6925413834765719932-706570588804805193?l=venkaiyan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://venkaiyan.blogspot.com/feeds/706570588804805193/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://venkaiyan.blogspot.com/2009/10/23.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6925413834765719932/posts/default/706570588804805193'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6925413834765719932/posts/default/706570588804805193'/><link rel='alternate' type='text/html' href='http://venkaiyan.blogspot.com/2009/10/23.html' title='அங்கம் 23'/><author><name>வேங்கையன் பூங்கொடி (காவியம்)</name><uri>http://www.blogger.com/profile/03445322919374394926</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://1.bp.blogspot.com/-yJU2OVtkJVc/TeJSVjeGpMI/AAAAAAAAABw/BetBpneXF6I/s220/54526902.jpg'/></author><thr:total>0</thr:total></entry></feed>
